அங்கஜன் எம்.பியின் உறுதிமொழியால் ஏமாற்றம்! தொடரும் பரவிபாஞ்சான் மக்களின் போராட்டம்

169

angajan

கிளிநொச்சி – பரவிபாஞ்சான் பகுதியில் இராணுவத்தினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி இன்று ஆறாவது நாளாகவும் பிரதேச மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

பரவிப் பாஞ்சான் காணி விவகாரம் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் அங்கு சென்று பொதுமக்களுக்கு உறுதிமொழி வழங்கியிருந்தார்.

எனினும் இதுவரையில் எந்தவித தீர்வும் கிடைக்காத பட்சத்தில், பொதுமக்கள் தொடர்ந்தும் காணியை விடுவிக்குமாறு கோரி இன்று ஆறாவது நாளாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

SHARE