அஜித் எப்போதும் நிதானமாக தான் ஒரு சில முடிவுகளை எடுப்பார். மிகுந்த யோசனைக்கு பிறகு தான் தன் ரசிகர் மன்றத்தையே கலைத்தார். இதனால், அவருடைய ரசிகர்கள் கொஞ்சம் வருத்தமடைந்தனர்.
தற்போது மேலும் ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளார். ஆனால், இந்த முடிவு ரசிகர்களுக்கு சந்தோஷத்தை தான் தரும்.
கடந்த வருடம் அஜித் என்னை அறிந்தால், வேதாளம் என இரண்டு படங்களில் நடித்தார். இரண்டுமே ரசிகர்களை வெகுவாக கவர, வேதாளம் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பியது.
இதனால், இனி வரும் காலங்களில் ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிப்பதாக அஜித் முடிவு செய்து விட்டாராம். அதன்படி அடுத்து சிவா, விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடிக்க சம்மதித்துள்ளதாக கூறப்படுகின்றது.
ஆனால், ஏற்கனவே இதுபோல் அஜித் கூறி, பின் ஒரு சில தோல்விகளால் இனி வருடத்திற்கு ஒரு படம் என முடிவு செய்தார், இந்த முறை அஜித் இதை பின்பற்றுவாரா, இவரின் வெற்றி பார்முலா கைகொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.