அஜித் மனதுக்குள் ஷாலினி வரக்காரணம் என்ன?

149

அனைவரும் வியக்கும் படி அன்பான தம்பதிகளாய் வலம் வருகின்றனர் கோலிவுட்டின் அஜித்- ஷாலினி ஜோடி.

அன்பின் அடையாளமாய் விளங்கும் இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள்.

தனது குடும்பத்தின் மீது அளவுகடந்த பாசத்தை வைத்திருக்கும், அஜித், தனது மனைவியான ஷாலினை ஆசை ஆசையாக, உருக உருக காதலித்து திருமணம் செய்துகொண்டாராம்.

அமர்க்களம் திரைப்படத்தின் போது ஒன்றாக நடித்த இவர்கள் இருவருக்குள்ளும் காதல் மலர்ந்துள்ளது.

அத்திரைப்படத்தின் ஒரு காட்சியில், ஷாலியின் கையில் அஜித் கத்தியால் கிழித்துள்ளார்.

தன்னால் இப்படி ஷாலினுக்கு நடந்துவிட்டதே என்று அஜித் பரபரப்பாக இருக்க, எவ்வித அலட்டலும் இல்லாமல், பரவாயில்லை என்று கூறி நிதானமாக இருந்துள்ளார் ஷாலினி.

ஷாலினியின் அந்த நிதானம் அஜித்திற்கு பிடித்துவிட, அப்போதே அவரது இதயத்திற்குள் ஷாலினி குடிகொள்ள ஆரம்பித்துள்ளார்.

இந்த திரைப்படத்தின் போதே இருவரும் நெருங்கி பழக ஆரம்பித்துள்ளனர். இதுவரை சந்தித்த பெண்களிடம் காண முடியாத தீர்க்கம் ஷாலினின் கண்ணுக்குள்ளும், செயலுக்குள்ளும் ஒளிந்திருப்பதை உணர்ந்த அஜித், எனக்கான தேடல் இவள்தான் என்பதை அறிந்து, நேராக ஷாலினியிடம் சென்று உன்னை கல்யாணம் செய்துகொள்ள ஆசைப்படுகிறேன் என்று கூறியுள்ளார்.

இதே ஆசை, ஷாலினியின் மனதுக்குள்ளும் இருந்ததால், காதலுக்கு பச்சைகொடி காட்டியதால் திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர்.

ஷாலினி கிறிஸ்துவர், அஜித் பிராமின், இது அவர்களது காதலுக்கும், வாழ்வியலுக்கும் ஓர் தடையாக இருந்திடவில்லை.

காரணம் யாரும், மற்றொருவருக்காக மதம் மாறவில்லை. மதம் என்பது உள்ளத்தில் நல்ல எண்ணங்கள் வளர்வதற்காக தானே தவிர, காதலுக்கு தடையாய் அமைவதற்கு அல்ல.

கணவன்- மனைவி ஆகிய இருவரும், ஒருவருக்கொருவர் மரியாதை அளித்து, தங்களது உணர்வுகளுக்கு மதிப்பளித்து நடந்துகொண்டாலே இல்லறம் இனிக்கும் என்கிறார் அஜித்.

 625-0-560-350-160-300-053-800-668-160-90-2 625-0-560-350-160-300-053-800-668-160-90-3 625-0-560-350-160-300-053-800-668-160-90-4

SHARE