சமீபத்தில் இறந்த முன்னாள் ஜனாதிபதியும், விஞ்ஞானியுமான அப்துல் கலாமின் இறுதி சடங்களில் அஜித், விஜய் ஏன் கலந்து கொள்ளவில்லை என்பது தான் இணையவாசிகளின் Hot Topic.
இந்நிலையில் விஜய் தரப்பிலிருந்து விஜய்யின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் கலாம் மறைந்த அன்று மட்டும் அப்துல்கலாம் சார் நீங்கள் மனிதநேயத்தின் மறுவரையறை. உங்கள் ஆத்மா சாந்தியடையட்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அவரது ட்விட்டர் பக்கத்தில் எந்தச் செய்தியும் இது குறித்து போடப்படவில்லை.
அதே சமயம் பொது விழாக்கள், பட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாத அஜித், துக்க விஷயத்தில் கண்டிப்பாக இருப்பார். ஆனால் அவரும் சமீபகாலமாக அதிலும் கலந்து கொள்ள வில்லை, இதனால் இரண்டு நடிகர்களின் ரசிகர்களும் மாறி மாறி சண்டையிட்டு வருகின்றனர். தற்போது இருக்கும் தொழில்நுட்பத்தில் ஒரு சிறு இரங்கல் செய்தி கூட ஊடகங்களில் மூலம் வெளியிடுவது எளிதான விஷயம், ஆனால் அதை கூட செய்யவில்லை என்பது தான் கவலை.
அது போல் அஜித், விஜய் ரசிகர்களின் சண்டை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் போகிறது. துக்கம் விசாரிக்க வந்த இடத்தில் நடிகர்கள் வந்தால் அங்கும் சில ரசிகர்கள் குதுகலமாகி நடிகர்களின் பெயரை சொல்லி கோஷம் எழுப்பவதால் தான் முன்னணி நடிகர்கள் தவிர்க்கின்றனர் என்கிறது இன்னொரு தரப்பு.