மிஷ்கின் திரைப்பயணத்தில் மாபெரும் வெற்றிபெற்ற படம் அஞ்சாதே. இப்படம் விமர்சனம், வியாபாரம் என அனைத்திலும் நல்ல வரவேற்பு பெற்றது.
இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கலாம் எனமிஷ்கின் எண்ணியுள்ளாராம். முதல் பாகத்தில் நடித்த எந்த நடிகரும் இல்லாமல் புதிய நடிகர் பட்டாளத்துடன் களம் இறங்கவுள்ளாராம்.
இதில் இவரின் முதல் சாய்ஸ் ஜெயம் ரவி தானாம், ஏனெனில் தற்போது உள்ள இளம் நடிகர்களில் ஜெயம் ரவி படத்திற்கு தான் நல்ல மார்க்கெட் உள்ளதால் இந்த முடிவு என கூறப்படுகின்றது.