கிண்ணியா டீ.பி. ஜாயா மகளிர் பாடசாலையின் அடிப்படை வசதிகளைச் செய்து தருமாறு கோரி மாணவிகள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திருகோணமலை மாவட்டம், கிண்ணியாவில் அமைந்துள்ள டீ.பி. ஜாயா முஸ்லிம் மகளிர் பாடசாலை பிரதேசத்தின் பிரபல பாடசாலைகளில் ஒன்றாகும். சீனன்குடா, வெள்ளைமணல், நாச்சிக்குடா உள்ளிட்ட பிரதேசங்களின் மாணவிகள் பலரும் இங்கு கல்வி கற்கின்றனர்.
எனினும் குறித்த பாடசாலையில் அடிப்படை சுகாதார வசதிகள், விஞ்ஞான ஆய்வுகூடம், வகுப்பறை வசதிகள் எதுவும் இல்லை.இது குறித்து அதிகாரிகளிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோள் தொடர்ச்சியாக அலட்சியப்படுத்தப்பட்டுள்ளது.
இதனைக் கண்டித்து பாடசாலையின் மாணவிகள் இன்று வகுப்பறை பகிஷ்கரிப்பு மற்றும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.