அட்டனில் பஸ் விபத்து – மாணவன் பலத்த காயம்

226

அட்டன் நகரத்திலிருந்து 03.03.2016 அன்று காலை 7.30 மணியளவில் டயகம நோக்கி சென்ற தனியார் பஸ் ஒன்று பாடசாலை மாணவன் மீது மோதியதால் மாணவன் படுகாயங்களுடன் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளான்.

இவ்விபத்து தொடர்பாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவருவதாவது, டிக்கோயா தரவளை பகுதியில் 8 வயதுடைய மாணவன் ஒருவன் தனது வீட்டிலிருந்து பாடசாலைக்கு செல்லும் போது படியில் இருந்து வீதிக்கு இறங்கும் பொழுது அவ்வழியாக வந்த பஸ் மாணவனின் மீது மோதியதாலேயே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அத்தோடு இவ்விபத்தினால் அப்பகுதி சுமார் 1 மணி நேரம் பதற்ற நிலையில் காணப்பட்டது. இதேவேளை அவ்வழியில் போக்குவரத்து சில மணி நேரம் ஸ்தம்பிதமடைந்தது. இப்பகுதி மக்கள் பாதையை மறித்து ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ள முயற்சித்த போதிலும் பொலிஸாரின் தலையீட்டின் காரணமாக ஆர்ப்பாட்டம் தடுக்கப்பட்டது. காயமடைந்த மாணவன் தரவளை பாடசாலை ஒன்றில் தரம் 3ல் கல்வி கற்பதாக தெரிவிக்கப்படுகின்றது. வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட மாணவன் தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டதால் தொடர்ச்சியாக தங்கி சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்த மாணவனை பஸ் சாரதியும் நடத்துனரும் குறித்த பஸ்ஸிலேயே ஏற்றிச்சென்று வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டமை குறிப்பிடதக்கது. அத்தோடு சந்தேக நபரான பஸ் சாரதியை அட்டன் பொலிஸார் கைது செய்துள்ளதோடு அட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதாக அட்டன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

0de037bb-0491-4650-b006-249519f868e7 3fc7c681-f131-4354-897c-d966ab851576 5a0656a5-9848-40b4-84f5-fb34765b982d 5ecc8eb1-930b-4e24-922f-d7d445dea640 24b30392-dc7a-416d-9ce3-6e3bbf379360 75d0f5f6-a36e-4b02-baff-34a50cac6aa1 78569bd9-8616-401a-ac19-4a3a35f97080 995887dc-6eee-4bb9-927b-a59b3675ac9b 66475923-0674-4a0b-80fe-1d04e7cd5856 a49878da-a740-44d3-95cb-10ab9a017fc5 bb662e2b-d4ff-4dc1-bec4-ed15631b351f bc7a312f-f9f6-442d-a54a-d5cd3e1e3e22 bda367cb-55c4-484e-8745-a70238a9661d dece3d18-f7f5-49c6-b761-c0751822f32f ef3afac3-3b5d-4260-8658-51f565c4bbab fc0c0410-9a0f-4c47-a752-999f3752af8d

SHARE