அட்டன் மஸ்கெளியா பிரதான பாதையின் நோர்வூட் பகுதியில் இடம் பெற்ற பஸ் விபத்தில் 14 பேர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுளனர்
நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அயரபி பகுதியில் 03..05.2016 பகல் 2.30 மணியளவில் இவ் விபத்து சம்பவித்துள்ளது
மஸ்கெளியாவிலிருந்து அட்டன் நோக்கி பயணிகளை ஏற்றிவந்த தனியார் பஸ் வண்டியானது திடீரென ஏற்பட்ட இயந்திர கோளாரினால் பாதையை விட்டு விளகி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குளாகியுள்ளது காயமுற்றவர்களில் 12 பாடசாலை மாணவர்களும் 2 ஆசிரியர்களுமாக 14 பேர் டிக்கோயா மாவட்ட வைத்தீயசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் விபத்துதொடர்பில் விசாரணை தொடர்வதாகவும் தெரிவித்தனர்