புலி படத்தை முடித்த கையோடு, அட்லி இயக்கத்தில் பெயரிடப்படாத ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார் விஜய். கத்தி படத்தில் அவருடன் முதல் முறையாக ஜோடி சேர்ந்த சமந்தா தான் இந்த படத்தின் ஹீரோயின்.
ரஜினியின் முள்ளும் மலரும் உட்பட பல வெற்றி படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் மகேந்திரன் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
படப்பிடிப்பு தொடங்கி கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு மேல் ஆகிறது, இப்போது படத்தை பற்றி ஒரு தகவல் கசிந்துள்ளது. இந்த படத்தில் சமந்தாவின் அம்மாவாக கன்னட நடிகை நிஹாரிகா நடிக்கிறாராம்.