அண்மைக்காலமாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஊடகங்களின் கவனத்தைப் பெற்றுள்ளார்.
மஹிந்த தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சிக்குள் ஏற்பட்டுள்ள முறுகல் நிலை மற்றும் அதன் பிளவுகளால் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.
இதுவரை எந்தவித அரசியல் ஸ்திரத்தன்மையும் இல்லாத மஹிந்த, தன்னை தக்க வைத்துக் கொள்ள வேண்டிய அவசிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் கூட்டு எதிர்க்கட்சியினரை மீட்டெடுப்பதற்காக மஹிந்த ராஜபக்ச இறுதி முயற்சி ஒன்றை முன்னெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மஹிந்த, போர் வெற்றி வீரனாக என்றும் பெரும்பான்மை இனத்தவரின் மனங்களை வென்றவராக காணப்படுகிறார்.
இவ்வாறான நிலையில் அரசியல் அநாதையான மஹிந்த, போர் குறித்த தகவல்களை வீதியில் இறங்கி பிரச்சாரம் செய்யவுள்ளார். இதன்மூலம் பொதுமக்களை தன் அரசியல் சார்ந்த நோக்கத்திற்காக பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டுள்ளார்.
வீமல் வீரவன்ச போன்ற அரசியல் அநாதைகளின் ஆலோசனைகளை கேட்டு அதற்கமைய செயற்பட்டமையினாலே, அரச மாளிகையிலிருந்து நடுவீதிக்கு இறங்கும் நிலை மஹிந்த ராஜபக்சவுக்கு ஏற்பட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.