
கிரிக்கெட் வீரர்களுக்கும் ஊக்க மருந்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நடப்பாண்டில் மே மாதம் வரை சகலதுறை ஆட்டக்காரர் ஜடேஜா தன்னை அதிகமுறை ஊக்க மருந்து சோதனைக்கு உட்படுத்தி கொண்டுள்ளார்.
அவர் ஜனவரி முதல் மே வரையிலான 5 மாதங்களில் 3 தடவை பரிசோதனைக்கான மாதிரிகள் வழங்கியதாக தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமை தெரிவித்துள்ளது.
அவருக்கு அடுத்தப் படியாக தமிழக வீரர் டி.நடராஜன் 2 முறை பரிசோதனை மாதிரிகள் வழங்கியுள்ளார்.
இந்த ஆண்டின் முதல் 5 மாதங்களில் இந்திய கிரிக்கெட் வீரர், வீராங்கனைகள் 55 பேர் தங்களை ஊக்க மருந்து பரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்டனர். அவர்களிடம் இருந்து மொத்தமாக 58 மாதிரிகள் பெறப்பட்டுள்ளன.