அதிக போதை மருந்து பயன்பாட்டினால் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கிரேட்டர் விக்டோரியாவில் 8 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனடாவின் கிரேட்டர் விக்டோரியா பகுதியில் அதிக போதை மருந்து பயன்பாட்டினால் உயிரிழப்பு அதிகரித்துள்ளதாக பிரேத பரிசோதனை சேவையகத்தினர் தெரிவித்துள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கிரேட்டர் விக்டோரியா பகுதியில் அதிக போதை பயன்பாட்டினால் 8 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கும் சிறப்பு விசாரணை அதிகாரி,இதில் 5 பேர் ஆண்கள் எனவும் 3 பேர் பெண்கள் எனவும் தெரிவித்த அவர், விக்டோரியா பகுதியில் உயிரிழந்துள்ள நபர் மதுவில் போதை மருந்து மாத்திரைகளை கலந்து அருந்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். எஞ்சிய 7 நபர்களின் நச்சுயியல் அறிக்கைகளுக்காக காத்திருப்பதாகவும், தெரிவித்த அதிகாரி Barb McLintock, பெரும்பாலான நபர்கள் குறிப்பிட்ட அளவு போதை மருந்தை தினசரி பயன்படுத்துவோர் எனவும், பல நேரங்களில் போதை மருந்தை அதிகம் பயன்படுத்தினாலும் உயிர் பிழைத்தவர்களும் உள்ளனர் என்றார். |