பொலனறுவையில் இறந்த நிலையில் காணப்பட்ட யானையொன்று பொலிஸாரினால் இன்று (11) மீட்கப்பட்டுள்ளது.
யானை இறந்ததற்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை எனினும் குறித்த யானைக்கு 25 வயது இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது
குறித்த விடயம் தொடர்பில் வனவிலங்கு அதிகாரிகள் கருத்து தெரிவிக்கையில்
இவ்வாறு யானைகள் இறப்பது புதிதல்ல இருப்பினும் கடந்த 2 வருடமாக யானைகளின் அதிகரிப்பு தொடர்ந்து வருகின்றது.
அண்மையில் மாத்தளை, தம்புளுகல பிரதேசத்தில் இவ்வாறான யானையின் சடலமொன்று மீட்கப்பட்டது
மேலும் யானைகள் புகையிரதங்களில் மோதி இறப்பது என தொடர்ந்து யானைகள் இறந்து வருகின்றன. இதனை கட்டுப்படுத்த உரிய வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.