அதிகாரி ஒருவரை சுட்டுக் கொன்ற இராணுவ வீரர் ஒருவருக்கு யாழ். மேல் நீதிமன்றம் நேற்று வியாழக்கிழமை மரண தண்டணை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

365
அதிகாரி ஒருவரை  சுட்டுக் கொன்ற இராணுவ வீரர் ஒருவருக்கு யாழ். மேல் நீதிமன்றம் நேற்று வியாழக்கிழமை மரண தண்டணை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

பொன்னம் பெரும ஆராச்சிகே என்பவர் யாழ். காங்கேசன்துறை நலன்புரி நிலையத்தில் வைத்து கடந்த 2007ம் ஆண்டு, மே மாதம் 15ம் திகதி ரி.56 ரக துப்பாக்கியால் சக இராணுவ கப்டன் தர அதிகாரியை  சுட்டு கொலை செய்துள்ளார்.

இந்த துப்பாக்கி சூட்டில் உபாலி ரலவப்பனவ (வயது 39) என்ற இராணுவ கப்டன் உயிரிழந்துள்ளார்.

இக்கொலை சம்பவம் தொடர்பில் கடந்த 2011ம் ஆண்டு ஜூலை மாதம் சட்ட மா அதிபர் திணைக்களத்தினால் யாழ். மேல் நீதிமன்றில் வழக்கு பாரப்படுத்தப்பட்டு, தொடர்ந்து நடைபெற்று வந்தது.

இந்நிலையில், நேற்று வியாழக்கிழமை யாழ். மேல் நீதிமன்றில் நீதிபதி கனகா சிவபாதசுந்தரம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, குறித்த இராணுவ வீரர் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளமையினால் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

SHARE