அதிக சம்பளம் வாங்கும் கோஹ்லி!

659

 

ஒவ்வொரு வருடமும் நடக்கவிருக்கும் ஐபிஎல் தொடருக்காக வீரர்கள் ஏலம் விடப்படுவார்கள்.அதற்கு முன் ஐ.பி.எல். அணிகள் ஐந்து பேரை தக்க வைத்துக்கொள்ளலாம்.

அதன்படி முதல் நபரை 12.5 கோடி ரூபாயிலும், 2-வது வீரரை 9.5 கோடி ரூபாயிலும், 3-வது வீரரை 7.5 கோடி ரூபாயிலும், 4-வது வீரரை 5.5 கோடி ரூபாயிலும், ஐந்தாவது வீரரை 4 கோடி ரூபாயிலும் தக்க வைத்துக் கொள்ளலாம்.

அதன்படி ஒரு அணி தனது ஏலத் தொகையான 66 கோடி ரூபாயில் இருந்து ஐந்து வீரர்களுக்கு 40 கோடி ரூபாய் செலவழிக்க வேண்டும். மீதமுள்ள 26 கோடி ரூபாயில் மற்ற வீரர்களை ஏலம் எடுக்க வேண்டும்.

அதன்படி விராட் கோஹ்லியை ராயல் சேலஞ்சர்ஸ் அணி முதல் நபராக 12.5 கோடி ரூபாய்க்கு தக்க வைத்துள்ளது.

கோஹ்லிக்கு கூடுதலாக 2.5 கோடி ரூபாய் வழங்குகிறது. இதனால் அவர் 15 கோடி ரூபாய் பெறுகிறார். இதன்மூலம் ஐ.பி.எல். தொடரில் அதிக சம்பளம் வாங்கும் வீரராக கோஹ்லி மாறியுள்ளார்.

தற்போது புதிய அணியான புனே, டோனியை 12.5 கோடி ரூபாய்க்கு தக்கவைத்துள்ளது. இருந்தாலும் கோஹ்லிக்கு இணையான சம்பளம் டோனிக்கு கொடுக்க வாய்ப்புள்ளது.

SHARE