முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு கோவை எம்.எல்.ஏ அருண்குமார் தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ் சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் மெஜாரிட்டியை நிரூபிக்க முடியாமல் தோற்றார்.
இதனால் சசிகலா அணியை சேர்ந்த எடப்பாடி பழனிச்சாமி தமிழக முதல்வரானார்.
ஆனாலும், பொது மக்களின் ஆதரவு ஓ.பி.எஸ்க்கு தான் இருந்து வருகிறது. இந்நிலையில் கோவை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ அருண்குமார் நேற்று ஓ.பி.எஸ் இல்லத்துக்கு வந்தார்.
பின்னர் தனது ஆதரவை ஓ.பி.எஸ்க்கு தெரிவிப்பதாக அறிவித்தார். பன்னீர்செல்வம் தலைமையிலான தர்ம யுத்தத்தில் தன்னை இணைத்து கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.
இதையடுத்து ஓ.பி.எஸ் ஆதரவு எம்.ஏல்.ஏக்கள் எண்ணிக்கை 12ஆக உயர்ந்துள்ளது.