அனந்தி சசிதரனின் அதிரடி அரசியல்

631

சுமந்திரன் என்பவர் சம்பந்தன் கோஷ்டியால் எம்.பி.யாக நியமிக்கப்பட்ட ஒரு கொழும்புப் பிரமுகர். அனந்தி, வட மாகாண சபைத் தேர்தலில், முதல்வர் விக்னேஸ்வரனுக்கு அடுத்தபடியாக மிக அதிக வாக்குகளைப் பெற்ற தமிழினத்தின் நேரடிப் பிரதிநிதி.

சுற்றிலும் இராணுவம் முற்றுகையிட்டிருக்கும் நிலையிலும் மனித மிருகம் தீக்கிரையாக்கப்படுவது, வீழ்த்தப்பட்டிருக்கும் நிலையிலும் நாம் பலமாகும் அதே சமயம், இன அழிப்பு என்கிற வார்த்தையையே அகராதியிலிருந்து எடுத்துவிடத் துடிக்கும் தொடர்புடையவர்களைப் பார்க்கும்போது, துரோகம் முற்றிலுமாகத் தொலைந்துவிடவில்லை என்கிற யதார்த்தமும் சேர்ந்து அம்பலமாகிறது. ஈழத்தில் நடந்தது திட்டமிட்ட இனப்படுகொலை.

இருதரப்புப் போர் என்று அதைச் சித்தரிப்பது உண்மையைத் திரிப்பது, அது ஓர் இயக்கத்தை அழிப்பதற்கான தாக்குதல் அல்ல, ஓர் இனத்தை அழிக்கத் தொடுக்கப்பட்ட போர், கொல்லப்பட்ட ஒன்றரை லட்சம்பேரும் அப்பாவிப் பொதுமக்கள், சிதைக்கப்பட்ட ஆயிரமாயிரம் சகோதரிகள் நிர்க்கதியாக நின்ற நிரபராதிகள் இதைத்தான் நாம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இன்று ஈழமண்ணின் வலியையும், வேதனையையும் புரிந்துகொள்ளத் தொடங்கியிருக்கும் உலக நாடுகள் அனைத்துமே, இனப்படுகொலை நடந்து கொன்டிருந்தபோது அதை அறிந்தோ அறியாமலோ நெட்டை மரங்களென நின்று கொண்டிருந்தவர்கள்தான். செய்த பாவத்துக்குப் பிராய்ச்சித்தமாக ஒரு துரும்பையாவது தூக்கி வைத்துவிடவேண்டும் என்று இன்று நினைக்கிறார்கள் அவர்கள்.

ஒன்றரை லட்சம் உறவுகளின் இரத்தத்தால் சுத்திகரிக்கப்பட்டிருக்கும் வன்னி மண்ணில் இன்றைக்கு நிலவு கிற ஒரே நம்பிக்கை, சர்வதேசத்தின் மனமாற்றம் தான். கொல்லப்பட்ட தங்கள் சொந்தங்களுக்கும், சிதைக்கப்பட்ட தங்கள் அக்கா, தங்கைகளுக்கும் நிச்சயமாக நீதி கிடைக்கும் என்கிற நம்பிக்கை உருக்குலைந்து போன வன்னி மண்ணில் உருவாக்கியிருப்பவர், நவநீதம் பிள்ளை என்கிற உறுதி குலையாத இரும்புப் பெண்மணி. அந்த இரும்பு மனுஷி யின் விடாப்பிடியான முயற்சிகளால், மலைப்பாம்பு போல சுருண்டு கிடந்த சர்வதேசம் இப்போதுதான் அசைந்து கொடுத்திருக்கிறது. இதுவே இறுதித் தீர்வு அல்ல என்பது நம் ஒவ்வொருவருக்கும் புரிகிறது. ஆனால், நிச்சயமாக இது ஒரு தொடக்கம்.

மார்ச் மாதம், ஜெனிவாவில், ஐ.நா. மனித உரிமைகள் பேரவை யில் நிறைவேற்றப்பட்டது ஒரு நீர்த்துப்போன தீர்மானம் தான். ஆனால், அதைப்பார்த்தே மிரளு கிறது இலங்கை. இலங்கைக்குள் நுழைந்து விசாரிக்க யாரை யும் அனுமதிக்க முடியாது, அப்படியே விசாரித்தாலும் பாதிக்கப்பட்டவர்கள் சாட்சியம் அளிக்க முடியாது, அப்படி யாராவது சாட்சியம் அளித்தால் சட்டத்தின் பிடியிலிருந்து அவர்கள் தப்பிக்க முடியாது, விசாரிக்க வருபவர்கள் அவ்வளவு சுலபத்தில் திரும்பிப் போய்விட முடியாது என்கிறது இலங்கை. ஜெனிவாவில் கேட்டது மணியோசை தான் என்றாலும், பின்னாலேயே யானை வந்துவிடும் என்று அஞ்சுவதால்தான் இப்படியெல்லாம் செயற்படுகிறது மஹிந்த அரசு. தங்கள் இனத்தை அழித்த ஒரு அரசு இப்படியெல்லாம் நடுங்குவதைப் பார்த்து வன்னித் தலப்பாக்கட்டுக்கள் மகிழ்ந்திருக்க வேண்டும். எதிரி நடுங்கும் நிலையில், உருவாகியுள்ள இந்தப் புதிய சூழலை மேலதிக சாதகமாக மாற்றுவதற்கான முயற்சிகளில் இறங்கியிருக்கவேண்டும். அதை அவர்கள் செய்தார்களா என்பது முதல் கேள்வி. அதைச் செய்யாமல் வேறென்ன செய்கிறார்கள் என்பது இரண்டாவது கேள்வி.
ஈழம் என்கிற ஒரு வீரஞ்செறிந்த மண்ணின் மீதான காதல் தான் என்னை எழுத வைக்கிறது, இயக்க வைக்கிறது. அந்த வணங்கா மண்ணையும், அந்த மண்ணை நிமிரவைத்த வேலுப்பிள்ளை பிரபாகரனையும் உங்களைப் போலவே நானும் பெருமையோடு என் அடை யாள மாக ஏற்றவன். ஒன்றரை லட்சம் உறவுகள் விரட்டி விரட்டிக் கொல்லப்பட்டதைக் கண்ணெதிரில் பார்த்தவர்கள், வன்னியில் வாழ்கிற தமி ழினத் தலைவர்கள். ஜெனிவா தீர்மானம் வெறும் மணியோ சையோடு நின்றுவிடக் கூடாது, யானை யும் பின்னாலேயே வந்துவிட வேண்டும், இனப்படுகொலைக் குற்றவாளிகளுக்குத் தகுந்த தண்டணை வழங்கப்படவேண்டும் என்று இந்தத் தலைவர்களில் எத்தனைப்பேர் விரும்புகிறார்கள்? நமக்குத் தெரியவில்லை.

நடந்தது இனப்படுகொலை என்பதை மூடிமறைக்க மஹிந்த அரசும், கோதபாயவும் முயல லாம். பொன்சேகா கூட முயலலாம். நடந்த இனப்படுகொலையில் நேரடிப் பங்கு இருந்ததால், சிங்கள அரசிற்கு அதற்கான காரணம் இருக்கிறது. இனப்படுகொலையை மூடி மறைக்க வன்னித் தலைகளில் சிலவும் தொடர்ந்து முயல்வதற்கு என்ன காரணம் இருக்க முடியும்? நடந்த இனப்படுகொலையில் இவர்களுக்கு மறைமுகப் பங்கு இருந்ததா என்கிற கேள்வி எழுமா எழாதா? ஒன்றரை லட்சம் உறவுகளைக் காப்பாற்ற முய லாத ஆட்டுத்தோல் ஓநாய்கள், அரசைக் காப்பாற்ற மட்டும் முண்டியடித்துக் கொண்டு முன்னால் வருவது ஏன்?

இப்படியெல்லாம் கேள்விகள் எழவும், இப்படியெல்லாம் சந்தேகங்கள் எழவும் காரணமாகிவிட்டிருக்கின்றன மர்ம மனிதர்கள் சிலரின் நடவடிக்கைகள். ஜெனிவாவில் இலங்கைக்கு எதிரான சர்வதேச நகர்வுகள் உச்சத்தில் இருந்தபோதே, அங்கேயிருக்கிற இலங்கைப் பிரதிநிதிகளோடு இந்த மர்ம மனிதர்கள் ஒட்டி உறவாடுவதாகச் செய்திகள் வெளியாகின. இன்றுவரை அந்த ஒட்டுதலுக்கும், உறவாடுதலுக்கும் என்ன காரணம் என்பதை அவர்கள் விளக்கவும் இல்லை. விளக்கம் கொடுக்கும்படி அவர்களது தலைமைகள் கேட்கவுமில்லை

ஜெனிவாவில் போய் உட்கார்ந்துகொண்டு இலங்கைக்கு முகவராகச் செயற்பட்டது ஏன் என்று யாரிடம் விளக்கம் கேட்டிருக்க வேண்டுமோ அவர்களிடம் கேட்கவில்லை வன்னித் தலப்பாக்கட்டுகள். அதையே ஜீரணிக்க முடியவில்லை நம்மால். இனப்படுகொலைக்கு நீதிகேட்க தனி மனுஷியாக ஜெனிவாவில் நின்று போரா டிய சகோதரி அனந்தியிடம் மேற்படி தலப்பாக்கட்டுகள் விளக்கம் கேட்டால் எப்படி அதை மன்னிக்க முடியும்?

இனப்படுகொலையை மூடிமறைக்க முயலும் அரசு சார்பானவர்களை ஊக்குவிப்பது, இனப்படுகொலைக்கு நீதி கேட்கும் முயற்சிகளை உருக்குலைப்பது என்கிற கொள்கை முடிவு எதை யாவது எடுத்திருந்தால், சம்பந்தன் வகையறாக்கள் அதை வெளிப்படையாகப் பிரகடனம் செய்துவிடுவது நல்லது. அதைச் செய்யத் தவறினால், ஈழத்துச் சகோதரிகளின் அடையாளமாகத் திக ழும் அனந்தியைக் கூட்டமைப்பின் கூட்டத்தில் கடுமையாகச் சாட சுமந்திரன் என்கிற மாமேதையை அனுமதித்தது ஏன் என்பதையாவது தெளிவுபடுத்த வேண்டும்.

சுமந்திரன் என்பவர், காணாதுபோனவர்களுக்குக் குரல் கொடுக்கும் முயற்சிக்குத் தன்னை அர்ப்பணித்தவர் அல்ல. அனந்தி, காணாது போன கணவருக்காக மட்டுமில்லாமல், காணாதுபோன ஆயிரமாயிரம் உறவுகளுக்காகக் குரல்கொடுப்பவர், வீதியில் இறங்கிப் போராடுபவர். அடிப்படையிலேயே இருவருக்கும் வித்தியாசம் இருக்கிறது. எங்கள் உறவுகளின் நேரடி ஆதரவு டன் முன்வாசல் வழியாக வடமா காண சபையில் நுழைந்தவர் எங்கள் பெருமைக்குரிய சகோதரி அனந்தி. பின்புற வாயில் வழியாக அரங்குக்குள் நுழைந்திருப்பவர் சுமந்திரன்.

சுமந்திரன் என்பவர் மிகச் சிறந்த அறிவாளி, மேதை என்றெல்லாம் யாராவது நினைத்துக் கொண்டிருந்தால், அவர்களிடம் கேட்க ஒரு கேள்வி இருக்கிறது என்னிடம். தன்னுடைய அறிவை, தன் இனத்தைக் கொன்று குவித்த அரசை காப்பாற்ற மட்டுமே பயன்படுத்தப் பார்க்கும் ஒரு மனிதரை இன்னும் எவ்வளவு காலத்துக்குத்தான் கட்டி ஆளப் போகிறீர்கள்? அந்த வேதாளத்தை இன்னும் எத்தனை நாள் தூக்கிச் சுமக்கப் போகிறீர்கள்? நடந்தது இனப்படுகொலை என்று தெரியு மாம். ஆனால் எடுத்த எடுப்பில் அப்படிச் சொல்வது இராஜதந்திரம் இல்லையாம்.

போர்க்குற்றம், மனித உரிமை மீறல் என்றெல்லாம் சுற்றி வளைத்துப் பேசி சர்வதேசத்தையும் சமாதானப்படுத்துவார்களாம். இவர் களுடைய நண்பன் மஹிந்த ராஜபக்ஷவைக் கூட அதை ஏற்கவைத்து விசாரணைக்கு ஒத்துழைக்கச் செய்வார்களாம். அதற்குப் பிறகு நாள் நட்சத்திரமெல்லாம் பார்த்து ‘நடந்தது இனப்படுகொலைதான்’ என்று அறிவிப்பார்களாம்.

புத்திசாலிகள் ஆடிக்கொண்டிருக்கிற ஆட்டம் இதுதான். அடிமுட்டாள்கள் என்று நினைக்கிறார்களா நம்மை. கொக்குக்குத் தெரியாமல் பதுங்கிப் பதுங்கிப் போவார்களாம். கொக்குக்கு அருகே சென்றதும் அதன் தலையில் வெண்ணெய் வைப்பார்களாம். வெயிலில் வெண்ணெய் உருகி கொக்கின் கண்ணை மறைக்குமாம். கொக்கின் கண்ணை வெண்ணெய் மறைத்ததும் லாவகமாக கொக்கைப் பிடித்துவிடுவார்களாம்.
இதுவல்லவோ அறிவுடைமை, இதுவல்லவோ இராஜதந்திரம் என்று நாம் பாராட்ட வேண்டுமென்று சம்பந்தன் வகையறாக்கள் எதிர்பார்ப்பது என்ன நியா யம்? கொக்கு தப்பித்துச் செல்ல எல்லா ஏற்பாடுகளும் செய்துவிட்டு, இப்படித்தான் பிடிக்க வேண்டும் என்று உபதேசம் செய்கிற எவரும், இலங்கை என்கிற பௌத்த சிங்கள பாசிசத் தேசத்தின் உப தேசங்களாக இருக்கட்டும். ஈழ தேசத்துக்குள் தப்பித் தவறி அவர்கள் தலைகாட்டிவிட வேண்டாம்.

சுமந்திரன் என்கிற மாமேதை யின் மூளை முழுக்க சிந்தனையே நிறைந்திருந்தாலும், அந்த சிந்தனை முழுக்க வஞ்சனை நிரம்பி வழி வதைப் பார்க்காமல், நசுக்கப்பட்ட எம் இனத்தின் வருங்காலத்தைத் தீர்மானிக்கும் பொறுப்பை அந்த மேதை யின் கையில் ஒப்படைக்கும் பேதை களாகவா மாறிவிட்டார்கள் தமிழி னத் தலைவர்கள். சர்வதேசத்தை மதிக்காமல், ‘விசாரணை என்கிற பேச்சுக்கே இடமில்லை’ என்று மிரட்டுகிறது இலங்கை. இலங்கையையும் கூட்டு சேர்த்துக்கொண்டு விசாரணைப்பாதைக்கு அழைத்து வந்துவிட வேண்டும் என்று முயற்சிப்பதுதான் முட்டாள்தனமே தவிர, சர்வதேசத்தின் கையைப்பிடித்துக் களத்தில் இறக்குவது அல்ல.

சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் இப்படியெல்லாம் நம்புபவர்கள் தங்கள் மூளைகளை எங்காவது சாணை பிடித்துக் கொள்வது நல்லது.

இனப்படுகொலை என்று சொல்வது சட்டப்படி செல்லத்தகாததாகி விடுமாம். இது மேலும் சில மெத்தப்படித்த மேதாவி களின் மேலான அபிப்பிராயம். மன்னார் மறை மாவட்ட ஆயரான இராயப்பு ஜோசப் ‘ஒன்றரை லட்சம் பேரைக் காணோம், அவர்கள் எங்கே’ என்று ஆதாரத்துடன் கேட்கிறாரே, இதைக் கேட்பது கூட சட்டப்படி செல்லாது என்கிறார்களா? அதைக் கேட்க முடியாது என்றால் இதையாவது கேட்க வேண்டியதுதானே. ஒன்றரை லட்சம் பேர் எங்கே போயிருக்க முடியும்? ‘அவர்கள் எங்கே என்று சொல், இல்லையேல் அவர்களைக் கொன்றுவிட்டதை ஒப்புக் கொள்’ என்று கூட கேட்க மாட்டார்கள் என்றால் இவர்கள் யார்?

அலரி மாளிகை வாயிலில் முறைவாசல் செய்யக்கூட கூச்சப்படாதவர்கள், உண்மையை உரைக்கத் தயங்காத அனந்தியிடம் விளக்கம் கேட்டிருப்பதிலிருந்து எம் இனத்தின் மீது துரோகத்தின் நிழல் இப்போதும் படிந்திருப்பது தெளிவாகத் தெரிகிறது. ‘இன அழிப்பு குறித்த சர்வதேச விசா ரணை அவசியம் என்று தெளிவாகவும், பகிரங்கமாகவும், நேர்மையாகவும் பேசத் தவறுவது எம் இனத்துக்கு இழைக்கும் மாபெரும் வரலாற்றுத் துரோகம்’ என்று தௌ;ளத் தெளிவான மொழியில் துணி வுடன் விளக்கியிருக்கிறார் அனந்தி. அந்த அளவுக்கு மொழியும் தெரிந்திருக்கிறது, வலியும் தெரிந்திருக்கிறது.

மாதர் தமை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம் என்றான் மகாகவி பாரதி. நீங்கள் அதை நிரூபித்திருக்கிறீர்கள். விவஸ்தையேயில்லாமல் விளக்கம் கேட்டவர்களுக்கு, விளக்குமாற்றால் விளக்கியிருக்கிறீர்கள்.

உங்கள் விளக்கத்தின் மூலம்தான் தலப்பாக்கட்டுகளுக்கு தெளிவும்இல்லை, நேர்மையும் இல்லை என்பது அம்பலமாகி இருக்கிறது. உங்களைப் போன்றவர்கள் இருக்கும் வரை குற்றவாளிகள் தலைகீழாக நின்றாலும், இனப்படுகொலையை மூடி மறைக்க முடியாது.

SHARE