அனுமதிப்பத்திரம் இன்றி சேவையில் ஈடுபடும் தனியார் பஸ்களுக்கான தண்டம் அதிகரிப்பு

270

போக்குவரத்து அனுமதிப்பத்திரம் இன்றி சேவையில் ஈடுபடும் தனியார் பஸ்களுக்கு எதிரான தண்டப்பணத்தினை இரண்டு இலட்சம் ரூபா வரை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலும் பஸ்களின் ஊடாக பெறப்படும் வருமானத்திற்கு ஏற்ப நடைமுறையிலுள்ள 10,000 ரூபா தண்டப்பணம் போதுமானதல்ல என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் எம்.ஏ.பீ.. ஹேமச்சந்திர தெரிவித்தள்ளார்..

அத்துடன் நடைமுறையிலுள்ள சட்டத்திற்கமைய போக்குவரத்து அனுமதிப்பத்திரமின்றி சேவையில் ஈடுபடும் தனியார் பஸ்களுக்கு 10,000 ரூபா தண்டப்பணம் அல்லது ஒரு வருட சிறைத்தண்டனையே அமுலிலுள்ளது.

எனினும் போக்குவரத்து அனுமதிப்பத்திரமின்றி சேவையில் ஈடுபடும் சில பஸ்களின் வருமானத்துடன் ஒப்பிடும் போது இந்த தண்டப் பணம் போதுமானதல்ல எனவும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டார்.

இதன் காரணமாக விதிக்கப்படும் தண்டப்பணத்தினை இரண்டு இலட்சம் ரூபாவாகவும், சிறைத்தண்டனை காலத்தினை 10 வருடங்களாகவும் அதிகரிப்பதற்கான கடிதத்தினை சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை நாடு பூராகாவும் அதிகளவான தனியார் பஸ்கள் போக்குவரத்து அனுமதிப்பத்திரமின்றி மாகாணங்களுக்குள்ளும், வெளியிடங்களுக்கும் சேவையிலீடுபடுவதாகவும் அவர் இதன் போது குறிப்பிட்டுள்ளார்.

bus_4

SHARE