அனுமதிப் பத்திரங்களில் சிக்கல் இருப்பின் அறிவிக்கவும் – பரீட்சைகள் திணைக்களம்

145

கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான அனுமதிப் பத்திரங்களில், ஏதேனும் பிரச்சினைகள் இருப்பின் அது தொடர்பில் விரைவில் அறிவிக்குமாறு,  பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமையிலிருந்து இப் பரீட்சைக்கான அனுமதிப்பத்திரங்களைத்  தபாலிடும் பணிகள்  ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக,  பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.

இந் நிலையில் இது தொடர்பில் ஏதேனும் சிக்கல்கள்  இருப்பின், 1911 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்குமாறும்,  பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித்த மேலும் குறிப்பிட்டுள்ளார்.

SHARE