அனைத்து உள்ளூராட்சி மன்றங்களும் எதிர்வரும் 15ம் திகதியுடன் கலைக்கப்படும்

311

john-amaratunga-150x150

உள்ளூராட்சி மன்றங்களின் கால எல்லையை மேலும் நீடிக்கப் போவதில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். கடந்த மார்ச் மாதத்துடன் உள்ளூராட்சி மன்றங்களுக்கான கால எல்லை நிறைவடைந்தது. இந்தநிலையில் இலங்கையில் ஏற்பட்ட புதிய அரசியல் நிலைமை காரணமாக, உள்ளூராட்சி மன்றங்கள் கலைக்கப்படும் காலம் மே 15ஆம் திகதி வரை பிற்போடப்பட்டது. இதற்கு மேலும் குறித்த கால எல்லை நீடிக்கப்படாது என அமைச்சர் ராஜித்த சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார். இதேவேளை அனைத்து உள்ளூராட்சி மன்றங்களும் எதிர்வரும் 15ம் திகதியுடன் கலைக்கப்படும் என, அமைச்சர் ஜோன் அமரதூங்க நேற்று வத்தளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

SHARE