அனைத்தையும் இழந்தார் மஹிந்த! அடுத்த கட்டம்…??

164

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இராணுவப் பாதுகாப்பு முழுயைமாக நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதுவரையில் மஹிந்த ராஜபக்சவிற்கு பாதுகாப்பு வழங்கி வந்த எஞ்சிய இராணுவப் படையினரும் வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இதற்கு முன்னதாக கமண்டோ படையினர் வாபஸ் பெற்றுக்கொண்ட போது சாதாரண பொலிஸ் உத்தியோகத்தர்களே கடமையில் ஈடுபடுத்தப்பட்டதாக மஹிந்தவிற்கு நெருக்கமான வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விசேட அதிரடிப்படையினரை அனுப்பி வைப்பதாக அறிவிக்கப்பட்ட போதிலும் அவ்வாறு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அறியமுடிகின்றது.

தற்போது நீக்கப்பட்ட இராணுவத்திற்கு பதிலாக, வேறு எவ்வாறான பாதுகாப்பு வழங்கப்படும் என்பது தெரியாது என மேலும் அந்த தகவல்கள் தெரிவிப்பதாக சிங்கள இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.magenta

SHARE