மயில்சாமி திரைப்படங்களில் காமெடியில் கலக்குபவர். இவர் எப்போதும் மக்களின் மனதை புரிந்து பேசக்கூடியவர்.
அப்படித்தான் சமீபத்தில் தமிழத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் மூட வேண்டும் என்று கூறியுள்ளார்.
மேலும், நான் தலைவனாக ஏற்றுக்கொண்ட ஒரே ஆள் எம்.ஜி.ஆர் தான், அதன் பின்பு அய்யா அப்துல் கலாம் தான் என கூறி ஒரு சில நொடிகள் அழ ஆரம்பித்துவிட்டார்.
அப்துல் கலாம் அவர்களின் பெயரை சொல்லும் போதே கண்ணீர் வருகின்றது, அந்த மனிதர் இறக்கும் போது அவருடைய வங்கி கணக்கில் இருந்தது வெறும் ரூ 2500 தான் என கூறி கண் கலங்கினார்.