முன்னாள் வடமாகாண பிரதி அவைத் தலைவர் அமரர் மரியாம்பிள்ளை அன்ரனி ஜெயநாதனின் 31வது நாள் நினைவு மலர் “ஜெகநாதம் உரிமைக்குரல்” நேற்று(31) மாலை முல்லைத்தீவு பிரதேச செயளக பொதுமண்டபத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.
குறித்த வெளியீட்டு விழா பாரளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
நிகழ்வில் மூலப்பிரதியை முல்லைத்தீவு பங்குத்தந்தை அன்ரனிப்பிள்ளை, வெளியிட்டதோடு நினைவுப் பரிசில்களை தமிழரசுக் கட்சி தலைவர் மாவை சேனாதிராசா வழங்கி வைத்துள்ளார்.
இந்த நிகழ்வில் மாவை சேனாதிராசா மற்றும் பாரளுமன்ற உறுப்பினர்கள், வடமாகணசபை உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள், மதகுறுமார்கள், மாணவர்கள், புத்திஜீவிகள், பொதுமக்கள் என பலரும் கலந்துக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.