இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்காவின் பசுபிக் கட்டளைத் தளபதி அட்மிரல் ஹரி ஹரிஸ், நேற்றைய தினம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பின் போது, இரண்டு நாடுகளுக்கு இடையிலான இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் இன்றைய தினம் ஆரம்பமாகவுள்ள, கடல்சார் பாதுகாப்பு மாநாடு(காலி கலந்துரையாடல்) கலந்து கொள்வதற்கான அமெரிக்காவின் பசுபிக் கட்டளத் தளபதி அட்மிரல் ஹரி ஹரிஸ் நேற்றைய தினம் கொழும்பை வந்தடைந்தார்.
மேலும், அட்மிரல் ஹரி ஹரிசுக்கு நேற்றிரவு வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, இரவு விருந்து வழங்கியுள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
பசுபிக் கட்டளை தளபதி, அட்மிரல் ஹரி ஹரிஸின் இலங்கைக்கான முதல் விஜயம் இது என்பது குறிப்பிடத்தக்கது.