அமெரிக்காவின் இதாஹோ மாநிலத்தில் இடம்பெற்ற கத்தி குத்து தாக்குதலில் 3 வயது குழந்தை உயிரிழந்துள்ளதுடன் 9 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதாஹோ மாநிலத்திலுள்ள அகதிகள் குடியிருப்பில் நேற்று திங்கட்கிழமை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த தாக்குதலில் உயிரிழந்த குழந்தையின் பிறந்த நாள் வைபவத்தின் போதே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
இந்த தாக்குதலில் காயமடைந்தவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் 30 வயதான டிம்மி ஃகின்னர் என்பவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த சந்தேகநபர் லொஸ் ஏஞ்சல்ஸை சேர்ந்தவர் என்பதுடன் இவர் ஒரு அகதி அல்லவெனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனினும், அவர் அனுமதியின்றி பொய்ஸிலுள்ள அகதிகள் குடியிருப்பில் தங்கியிருந்த சந்தர்ப்பத்தில் இரண்டு நாட்களுக்கு முன்னர் குறித்த குடியிருப்பில் இருந்து வெளியேற்றப்பட்டமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.