அமெரிக்காவின் ஒஹையோ மாநிலத்தில் உள்ள வால்மார்ட் ஷோரூமிற்குள் புகுந்த இளைஞர் ஒருவர் ரைபிள் துப்பாக்கியால் வாடிக்கையாளர்களை நோக்கி சரமாரியாக சுட்டதில் 04 பேர் காயமடைந்துள்ளனர்.
தகவலறிந்து போலீஸார் வருவதற்குள் அந்த நபர் தம்மை தாமே சுட்டுக் கொலை செய்துக் கொண்டதாகக் கூறப்படுகின்றது.
துப்பாக்கி சூட்டிற்கான காரணம் குறித்து போலீஸார் விசாரணை நடாத்தி வருகின்றனர்.