அமைச்சர் ரவூப்ஹக்கிம் அவர்கள் ரணில் விக்கிரமசிங்கவுடன் கண்டி அஸ்கிரிய பீடத்திற்குச் சென்று ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டமை தொடர்பில் மௌலவி முனாஜித் அவர்கள் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.
ஒரு வணக்கஸ்தலத்திற்குச் செல்வது தவறல்ல ஆனால் அவர்களுடைய பிராத்தனைகளில் ஈடுபடுவது தவறானது ஒன்றாகும். எமது அல்லாஹ் மீது நம்பிக்கை கொள்ளாதவர்களே அப்படிச் செய்கின்றார்கள். முஸ்லீம் அரசியல்வாதிகளையும், முஸ்லீம் தமிழ் மக்களையும் இழிவு படுத்துவதாகவே ரவூப்ஹக்கிம் அவர்களுடைய செயற்பாடு அமையப்பெறுகின்றது என அவர் தினப்புயல் ஊடகத்திற்கு தொலைபேசி வாயிலாக தனது கருத்தினைத் தெரிவித்தார்.