அமைச்சுப் பதவிகள் நாடாளுமன்றில் கூச்சலிடுகின்றனர்! ரணில் எச்சரிக்கை

242
அமைச்சுப் பதவி கோரி ஜனாதிபதியின் பின் சென்றவர்கள் பதவி கிடைக்காத காரணத்தினால், எதிர்க்கட்சியிலிருந்து கொண்டு கூச்சலிடுகின்றனர் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

சிலர் ஜனாதிபதியின் பின் சென்று அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக்கொள்ள முயற்சித்தனர்.

பதவிகள் கிடைக்காத காரணத்தினால் எதிர்க்கட்சிக்கு சென்று, சபை நடவடிக்ககைளை குழப்பும் வகையில் கூச்சலிடுகின்றனர்.

இவர்கள் சில அமைச்சர்களின் பெயர்களை இழுத்து பல்வேறு பொய்ப் பிரச்சாரங்களையும் குற்றச்சாட்டுக்களையும் முன்வைக்க முயற்சிக்கின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.

அவன்ட் கார்ட் சம்பவம் தொடர்பில் முக்கிய அமைச்சர் ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகின்றது என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மனுச நாணயக்கார நாடாளுமன்றில் பிரதமரிடம் கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்தக் கேள்விக்கு பதிலளித்த போது பிரதமர் மேற்குறிப்பிட்ட பதிலைத் தெரிவித்துள்ளார்.

SHARE