அம்பலாங்கொடை கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது

281

நபர் ஒருவரை கொலை செய்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் அம்பலாங்கொடை பொலிஸாரினால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் 10 ஆம் திகதி அம்பலாங்கொடை – மாதம்பே பிரதேசத்தினை சேர்ந்த
நபர் ஒருவர் சுட்டுக்  கொலை செய்யப்பட்டமை தொடர்பிலே, குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

35 வயதான வசந்த டி சொய்சா என்ற நபரே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட மைக்ரோ வர்க்கத்தினை சேர்ந்த துப்பாக்கி ஒன்று பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர், இன்று பலபிடிய நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளமை
குறிப்பிடத்தக்கதாகும்.

SHARE