அம்பாறை – திருக்கோயில் வயல் பிரதேசத்தில் வெட்டுக்காயங்களுடன் சடலம் மீட்பு

246
அம்பாறை – திருக்கோயில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தங்கவேலாயுதபுரம் சந்தியை அண்டியுள்ள வயலிலிருந்து வெட்டுக்காயங்களுடன் ஆண் ஒருவரின் சடலம் இன்று அதிகாலை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

சங்கமன் கிராமத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான தங்கவேல் குணசேகரம் (37) என்பவரின் சடலமென அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வயலில், காவல் கடமையில் ஈடுபடுவதற்காக அவரது வீட்டிலிருந்து நேற்று சென்றுள்ள இவரின் உடலில் வெட்டுக்காயங்கள் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Dead

SHARE