அம்பாறை மாவட்டத்தில் மத ஆலயங்களில் புதுவருடத்தினை முன்னிட்டு விசேட ஆராதனைகள்

374
அம்பாறை மாவட்டத்தில் உள்ள சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலம், கல்முனை அம்பலத்தடி விநாயகர் ஆலயங்களில் கடந்து வந்த 2015ஆம் ஆண்டினை நன்றியோடு வழியனுப்பி பிறந்திருக்கும் 2016 ஆம் ஆண்டினை வரவேற்று நற்கருனை ஆராதனை நிகழ்வுகளும், பூசை வழிபாடுகளும் நடைபெற்றன. சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலத்தில் நள்ளிரவு 12மணிக்கு திருத்தலத்தின் பங்குத்தந்தை ஆர்.திருச்செல்வம் அவர்களினால் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

பிறந்திருக்கும் புத்தாண்டினை அனைவரும் சந்தோசமாக வரவேற்றதுடன் கடந்து வந்த பாதையினை நினைத்து 2015 ஆண்டிற்கு நன்றி கூறும் நிகழ்வானது மிகவும் சிறப்பான முறையிலே திருத்தலத்தில் நடைபெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

SHARE