அரங்கேறும் சண்டைகள் கிரிக்கெட் வீரர்களிடையே மீண்டும் வாக்குவாதம்

152

625-500-560-350-160-300-053-800-748-160-70-11

போர்ட் எலிசபத்தில் நான்காவது ஒருநாள் போட்டியின் போது அவுஸ்திரேலியா வீரரும், தென் ஆப்பிரிக்க வீரரும் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் மைதானத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவுஸ்திரேலியா அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இதில் இரு அணிகளுக்கு இடையேயான 4 வது ஒரு நாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது.

இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி ஆரம்பத்தில் விக்கெட்டுகள் மளமளவென விழுந்தன. இதனால் அவுஸ்திரேலியா அணி 150 ஓட்டங்களை கடப்பது சிரமம் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அவுஸ்திரேலியா அணியின் விக்கெட் கீப்பரான மேத்யூ வேட் தனது அதிரடி ஆட்டம் மூலம் அவுஸ்திரேலியா அணியை நல்ல நிலைமைக்கு கொண்டு வந்தார்.

இதனால் தென் ஆப்பிரிக்க வீரர்கள் அவரை வீழ்த்துவதற்கு பல வியூகங்கள் வகுத்தனர். இதில் 17 வது ஓவரின் போது ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் மேத்யூ வேட், தென் ஆப்பிரிக்க பந்து வீச்சாளர் ஷம்சி வீசிய பந்தை அடித்து ஆடினார்.

அப்போது திடீரென இருவருக்கும் இடையே காரசாரமான வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருவருக்கொருவர் சரமாரியாக திட்டி கொண்டனர்.

அடுத்த பந்தில் ஓட்டம் எடுக்க ஓடுகையில் மேத்யூ வேட், ஷம்சியின் தோள்பட்டையில் முழங்கையால் இடித்தார். இதனால் இருவருக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது.

நடுவர்கள் தலையிட்டு இருவரையும் சமாதானப்படுத்தினார்கள். இதனால் சற்று நேரம் மைதானத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இச்சம்பவம் தொடர்பாக இருவருக்கும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் 25 சதவீதம் அபராதம் விதித்துள்ளது.

இதே போன்று சில தினங்களுக்கு முன்னர் தான் வங்கதேச வீரர்களும், இங்கிலாந்து வீரர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE