மக்கள் ஆணையில்லாத தொழில்சார் நபர்கள் மற்றும் அமைப்புகள் அரசாங்கத்திற்கு எதிராக மேற்கொள்ளும் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த தயார் என உயர்கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலில் அரசாங்கத்திற்கு கிடைத்த மக்களின் ஆணையை ஏற்றுக்கொள்ள விரும்பாத தரப்பினர் தமது பலத்தை காட்ட எதிர்வரும் மார்ச் மாதம் பாரிய பேரணியை நடத்த தயாராகி வருகின்றனர்.
அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களை சீர்குலைக்க முயற்சிக்கும் இந்த தரப்பினருக்கு மக்கள் ஆணையின் பலத்த காட்ட அரசாங்கம் தீர்மானித்துள்ளத எனவும் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.