அரசியலமைப்பு சபையின் வழி நடத்தல் குழு மீண்டும் கூடுகின்றது

193

அரசியலமைப்பு சபையின் வழி நடத்தல் குழுவின் கூட்டம் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெறவுள்ளது.

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் குறித்து அரசியலமைப்பு சபையினால் ஆராயப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், அதற்கான நிபுணர் குழுவின் அறிக்கை குறித்து அரசியலமைப்பு சபையின் கடந்த கூட்டத்தில் ஆராயப்பட்டது.

அது குறித்த தொடர்ச்சியான கலந்துரையாடல் இன்றைய கூட்டத்திலும் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

SHARE