அரசியல் எதிர்காலம் பற்றி தீர்மானிக்கவில்லை – உபேக்ஸா சுவர்ணமாலி

392
அரசியல் எதிர்காலம் பற்றி தீர்மானிக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் உபேக்ஸா சுவர்ணமாலி தெரிவித்துள்ளார்.

19ம் திருத்தச் சட்டம் தொடர்பில் கவனம் செலுத்தி வருகின்றேன். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எந்தக் கட்சியில் போட்டியிடுவது என்பது குறித்து தீர்மானிக்கவில்லை.

பொறுப்பு வாய்ந்த அரசியல்வாதி என்ற ரீதியில் 19ம் திருத்தச் சட்டம் குறித்து கவனம் செலுத்தப்படும். உத்தேச சட்டத்தை வாசித்து ஏதெனும் திருத்தங்கள் செய்ய வேண்டியிருந்தால் அது குறித்து குரல் கொடுப்பேன்.

தேர்தல் அறிவிக்கப்படாத நிலையில் எந்தக் கட்சியில் போட்டியிடுவது என்பது பற்றி தற்போதைய தீர்மானிக்க வேண்டியதில்லை என கொழும்பு ஊடகமொன்றுக்கு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

2010ம் ஆண்டில் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்ட சுவர்ணமாலி, பின்னர் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தில் இணைந்து கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE