அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் பல தடவைகள் அரசாங்கத்தால் எமக்கு உறுதிமொழி வழங்கப்பட்ட போதும் , பல மாதங்கள் கடந்தும் இன்னமும்நிறைவேற்றப்படவில்லை. எம்.பி.சித்தார்த்தன் 

260

D.Sithadthan2

ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்திலே பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவது,அரசியல் கைதிகளை விடுதலை செய்வது போன்ற விடயங்கள் மிகத் தெளிவாகக்கூறப்பட்டுள்ள நிலையில் அதனைச் செய்வதாக அரசாங்கம் சர்வதேசத்திற்குஉறுதியளித்துள்ள போதும் இன்றும் அரசாங்கம் தனது வாக்குறுதியை நிறைவேற்றாமல்பின் வாங்கிச் செயற்படுவது துரதிஸ்டம் எனத் தெரிவித்தார் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன்.

சகல அரசியல் கைதிகளையும் உடனடியாக விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி அரசியல்கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் ஏற்பாட்டில் இன்றுதிங்கட்கிழமை(08) முற்பகல்-10.30 மணி முதல் யாழ். பிரதான பேருந்து தரிப்பிடநிலையத்திற்கு முன்னால் பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் பல தடவைகள் அரசாங்கத்தால் எமக்கு உறுதிமொழி வழங்கப்பட்ட போதும் அந்த உறுதிமொழிகள் பல மாதங்கள் கடந்தும் இன்னமும்நிறைவேற்றப்படவில்லை.

ஏறக்குறைய 90 தமிழ் அரசியல் கைதிகள் இன்னமும் சிறையில்வாடிக் கொண்டிருக்கின்றனர். உண்மையிலேயே நல்லிணக்கத்தைத் தற்போதைய அரசாங்கம்வெளிப்படுத்துகிறது என்றால் அவர்கள் அனைவரும் எந்தவித நிபந்தனையுமின்றிஉடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.

அதன் மூலம் தான் அரசாங்கத்தின் உண்மையானநல்லிணக்கத்தை எமது மக்களுக்கு உணர்த்த முடியும்.

ஆகவே, எங்களுடைய அரசியல் கைதிகள் விடுவிக்கப்படும் வரை எமதுமக்களின் போராட்டம் தொடரும் என்றார்.

 

 

SHARE