அரசியல் கைதிகளை நிபந்தனை இன்றி விடுதலை செய்ய கோரியும் , சிறையில் உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், யாழில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
யாழ்.மத்திய பேரூந்து நிலையம் முன்பாக இன்று காலை 10.30 மணியளவில் புதிய ஜனநாயக மாக்சிஸ லெனினிசக் கட்சியினரால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு இருந்து.
இந்த போராட்டத்தில் அக் கட்சியினர் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் , அரசியல் கைதிகளின் உறவினர்கள் என பல கலந்து கொண்டனர்