அரசியல் கைதிகளை விடுதலை செய்ய கோரியும், பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க கோரியும், யாழில் பரவலாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு உள்ளன.
சம உரிமை இயக்கத்தினாரால் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு உள்ளன. இப்போதாவது பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கு! , இப்போதாவது அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்! என அந்த சுவரோட்டியில் வாசகங்கள் எழுதப்பட்டு உள்ளன.