அரசியல் நகர்வில் ரஜினியின் முக்கிய உத்தரவு!

185

தமிழக அரசியலில் கடந்த ஒரு வருடகாலமாக பரபரப்பிற்கு பஞ்சமில்லை. கடந்த ஓராண்டில் மட்டும் முதலமைச்சர் பதவி ஏற்பு இரண்டு முறை நடந்து முடிந்திருக்கிறது.

இந்நிலையில், முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர், அரசியல் சூழ்நிலைகள் மாற, மக்களின் பணிகளை அரசு செய்கிறதா? இல்லை அதிமுகவின் கட்சி அரசியல் நடக்கின்றதா என்று மக்கள் மட்டுமல்ல, அதிகாரிகள், பிரபலங்கள் என்று அனைவரும் குழம்பியிருந்தனர்.

இதற்கிடையில், அதிமுகவின் செயற்பாடுகளை வைத்து, மாநிலத்திற்குள் வேறு ஒரு இலகுவாக உள் நுழையப்பாத்திருந்தது.

எனினும் நேரடியாக தமிழகத்திற்குள் தங்களின் செல்வாக்கு எடுபடாது என்று அறிந்த அக்கட்சி, பிரபலங்களை வைத்து நுழைவதற்கு பல்வேறு தரப்பினர்களையும் சந்தித்து பேசியது. அப்படிச் சந்தித்துப் பேசியவர்களில் முக்கியமானவர் தான் நடிகர் ரஜினிகாந்த்.

ஆனால், ரிஜினிகாந்த தன்னுடைய அரசியல் அறிவிப்பு குறித்து அதுவரை எந்தவித கருத்துக்களையும் சொல்லவில்லை. இந்தவாரம் நடந்த ரசிகர்கள் சந்திப்பில் தான் ரஜினி தன்னுடைய அரசியல் பிரவேசம் குறித்து வாய் திறந்திருக்கிறார்.

இந்த ரசிகர்கள் சந்திப்பில் பேசிய ரஜினி, தமிழ் நாட்டில் அரசியல் சூழ்நிலை கெட்டுப்போயிருக்கிறது என்றும், நாட்டின் சிஷ்டமே தவறான முறையில் அமைந்திருக்கிறது என்றும், போர் வரும் போது பார்த்துக் கொள்வோம் என்று வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறார்.

இந்நிலையில் அவர் அரசியலுக்கு வந்துவிட்டார். அவரின் வெளிப்படையான கருத்து இது தான் என்கின்றன ஊடகங்கள். பல்வேறு அரசியல் கட்சிகளும், தலைவர்களும் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து கருத்துக்களையும் வெளியிட்டுள்ளனர்.

மத்திய அரசாங்கம் ரஜினியை வளைச்சுப் போடவேண்டும் என்பதில் குறியாக இருக்கிறது, ஆனால் ரஜினி அதில் இருந்து கழுவுகிற மீனில் நழுவுகிற மீனாக இருக்கிறார்.

ஆனால், அவர தனிக் கட்சி ஆரம்பிப்பார் என்றும், கூட்டணிக்குச் செல்லமாட்டார் என்றும் அவரைச் சார்ந்தோர் கருத்து வெளியிட்டுக் கொண்டிருக்கிறனர்.

தமிழ் நாட்டில் இப்பொழுது ஏற்பட்டிருக்கும் தலைமைத்துவ இடைவெளியை ரஜினிகாந்த் பயன்படுத்திக் கொள்வார் என்கின்றார்கள் விடயமறிந்த தரப்பினர்.

இதற்கிடையில் தான் அவர் ஒரு முக்கியமான முடிவினை எடுத்திருப்பதாக தமிழகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த மூன்று நாட்கள் ரசிகர்கள் சந்திப்பின்போது அவர்கள் சொன்ன பல விடயங்களையும் கவனமாக கேட்டுக் கொண்ட ரஜினி, தானும் அவர்களுக்கு பல யோசனைகளையும், சில வேலைகளையும் கொடுத்திருக்கிறார்.

குறிப்பாக தமிழகத்தின் அரசியல், பொருளாதார, சமூக சூழல் குறித்த பல விவரங்களை தொகுத்துத் தருமாறு ரசிகர்களிடம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழகத்தின் முக்கியமான பிரச்சினைகள் என்ன என்பது அதில் முக்கியமான ஒன்று என்று சொல்லப்படுகிறது. பிரச்சினைகள் குறித்த பட்டியல், அதற்கான தீர்வுகள், அதற்கு செய்ய வேண்டியது என்ன என்பது குறித்தும் விரிவான பட்டியல் கேட்டிருக்கிறார்.

இந்த பட்டியல் கைக்குக் கிடைத்தவுடன், தமிழகத்தின் தேவைகள் குறித்த கோரிக்கை மனுவுடன் பிரதமர் நரேந்திர மோடியை அவர் சந்திக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

ஒரு வேளை கோரிக்கை மனுவுடன் ரஜினி பிரதமரைச் சந்தித்தால், அந்தக் கோரிக்கைகளை மத்திய பாஜக அரசு உடனடியாக நிறைவேற்றுமா இல்லையா என்பதைப் பொறுத்து ரஜினியின் அரசியல் பிரவேசம் அமையலாம் என அவருக்கு நெருக்கமான சிலர் தெரிவித்துள்ளதாக ரஜினியை மேற்கோள்காட்டி செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

ஆனால், விரைவில் அவரின் தனிக்கட்சிக்கான அறிவிப்பு வரலாம் என்றும், எதிர்பார்க்கப்படுகிறது. தான் பச்சைத் தமிழன் என்றும், பெரியார் வழி தான் நடப்பேன் என்றும் அவர் முன்னர் எப்பொழுதும் பேசியதைவிட இப்பொழுது அழுத்தம் திருத்தமாக பேசியிருக்கிறார்.

ரஜினியின் இந்த உத்தரவுகள் அவரின் கைக்கு கிடைத்தவுடன், அவரின் அறிவிப்பு வருவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது.

SHARE