கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேத்தில் உள்ள தர்மக்கேணியில் கடந்த வாரம் மக்கள் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.
இதில் அதிகமான இளைஞர்கள் கலந்து கொண்டனர்.
இதன்போது மக்களின் தேவைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதோடு நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் உரை நிகழ்தினார்.
இவர் தனது உரையில்,
”இங்கு கூடியிருந்த மக்களிடையே அதிகளவான இளைஞர்கள் கலந்து கொண்டு இருப்பது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது, இவர்கள் தான் எமது தேசத்தை எதிர்காலத்தில் கட்டி எழுப்ப வேண்டியவர்களாக இருக்கிறார்கள், பல சவால்களையும் நெருக்கடிகளையும் எதிர்கொண்டு எங்களுடைய அரசியல் பயணம் தொடர்கிறது.
போரில் அழிந்து போன மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது ஒருபுறம் இருக்க, நீடித்து நிக்கவல்ல அரசியல் தீர்வொன்றை காண்பதற்காக சமாந்திரமான இருபயணங்களில் நாங்கள் ஈடுபட்டு இருக்கிறோம்.
எங்களுடைய இலக்கை நோக்கிய பயணத்துக்கு மக்கள் ஆதரவு இருந்து வருகிறது. ஆனால் அந்த ஆதரவு வாக்களிப்புடன் மட்டுப்படுத்தப்பட்டதாக இருக்க முடியாது, அது அறிவுப் பயணத்தை தரக்கூடியதாக இருக்க வேண்டும்.
இங்கு இருக்கின்ற இளைஞர்கள் ஒழுக்கத்தை பின்பற்றுபவர்களாக ஜனநாயக பண்புகளை நேசிப்பவர்களாக அறிவு, தொழில்நுட்ப ரீதியிலான ஆற்றல் என்பவற்றை ஒருங்கே பெற்றுக்கொள்வதனூடாக நீங்கள் பெறும் அந்தகூட்டு ஆளுமை இந்த தேசத்தை மீட்கவும் தேசத்தை பிரதிபலிக்கவும் அவசியமான பங்களிப்பு” என்றார்.
அத்துடன் தர்மகோணி பாடசாலையை தரம் உயர்த்தல், அவர்களது வாழ்வாதார மேம்பாடு, இளைய சமூகத்துக்கான வேலைவாயப்பு மற்றும் காணாமல்போனோர் குறித்த தகவல்கள் விரிவாக கலந்துரையாடப்பட்டு 2016ம்ஆண்டில் படிப்படியாக கூடிய கவனம் செலுத்தப்படும் எனவும் கூறினார்.