எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான தகவலொன்று வெளியிடப்பட்டுள்ளது.
அந்த வகையில் நாளைய தினம் அரச ஊழியர்களுக்கான சம்பளம் வழங்கப்படவுள்ளதாக அரச ஊடகமொன்று நேற்றைய தினம் வெளியிட்டுள்ள செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
புத்தாண்டை கொண்டாடவுள்ள அரச ஊழியர்களுக்கான பண்டிகை முற்பணம் 10,000 ரூபா ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையிலேயே ஏப்ரல் மாத சம்பளம் முன்கூட்டியே வழங்கப்படவுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, தமிழ், சிங்கள புத்தாண்டிற்கு முன்னர் ஐந்தரை இலட்சம் அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை வழங்க முடியாதென அமைச்சர் வஜிர அபேவர்தன அண்மையில் தெரிவித்திருந்தார்.
உள்நாட்டு, உள்ளக விவகாரங்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் வரவு செலவுத் திட்டம் தோல்வியடைந்தமையினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.