இலங்கை போக்குவரத்து சபையிலுள்ள அனைத்து ஊழியர்களினதும் விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் அசோக் அபேசிங்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் சித்திரை புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் 21ஆம் திகதி வரை இலங்கை போக்குவரத்து சபையிலுள்ள அனைத்து ஊழியர்களினதும் விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
புத்தாண்டு தினத்தை முன்னிட்டு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் 800 பேருந்துகள் மேலதிகமாக சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.
இலங்கை பேருந்து ஊழியர் சங்கத்தினராலும் மேலதிகமாக ஆயிரம் பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.