அர்ஜுன ரணதுங்கா படுதோல்வி: இலங்கை கிரிக்கெட் வாரியத் தலைவரானார் திலங்கா சுமதிபாலா

334
இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக திலங்கா சுமதிபாலா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகிகள் தேர்வு நேற்று கொழும்பில் நடைபெற்றது.

இதில் துணைத் தலைவர் பதவிக்கு உலகக்கிண்ணம் வென்று கொடுத்த முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்கா போட்டியிட்டார்.

அதேபோல் தலைவர் பதவிக்கு ரணதுங்கா சகோதரர் நிஷாந்தா போட்டியிட்டார்.

இந்நிலையில் அர்ஜுன ரணதுங்கா (80 ஓட்டுகள்) 22 ஓட்டுகள் வித்தியாசத்தில் ஜெயந்தா தர்மதாசாவிடமும் (102 ஓட்டுகள்), நிஷாந்தா (56 ஓட்டுகள்) 32 ஓட்டுகள் வித்தியாசத்தில் திலங்கா சுமதிபாலாவிடமும் (88 ஓட்டுகள்) வீழ்ந்தனர்.

இதன் மூலம் திலங்கா சுமதிபாலா புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டார். பெரும்பாலான பதவிகளை திலங்கா சுமதிபாலா அணியே கைப்பற்றியது.

SHARE