ஹவாய் தீவில் இருக்கும் கிலோவா எரிமலை கடந்த சில நாட்களாக எரி குழம்பை கக்கி வருகிறது. இந்த எரிமலை வெடிப்பால் அங்கிருக்கும் மக்களின் வாழ்வாதாரம் பெருமளவு பாதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் இந்த எரிமலை சீற்றத்தை, `இது அறிவியலுக்கு மிகப் பெரிய விஷயம்’ என்று விஞ்ஞானிகள் கொண்டாடி வருகின்றனர்.
கடந்த மே மாதம் 3 ஆம் தேதி முதல் இந்த எரிமலை, அதிவெப்பம் நிறைந்த குழம்பை கக்கி வருகிறது. ஆனால், கடந்த 25 ஆண்டுகளாக இந்த எரிமலை பொறுமையான அளவில் எரிச் சாம்பலையும், அவ்வப்போது சிறிய அளவிலான எரி குழம்பையும் கக்கி வந்த வண்ணம் இருக்கிறது. இதனால், அங்கு பல தொழில்நுட்ப வசதிகள் கொண்ட உணரிகள் வைத்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, அங்கு நடக்கும் ஒவ்வொரு அசைவும் மிக கவனமாக உற்று நோக்கப்பட்டு வருகிறது. கடந்த 25 ஆண்டுகளில் முதன் முறையாக கிலோவா எரிமலை தற்போது வெளியிட்டு வரும் அளவுக்கான எரி குழம்பை கக்கியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த மின்சார ஆலையின் நிர்வாகத் தரப்பு, `கிலோவா எரிமலை பொங்க ஆரம்பித்ததில் இருந்தே நாங்கள் உஷாராகத் தான் இருக்கிறோம். எங்கள் ஆலையை முழுவதுமாக இப்போது முடிவிட்டோம். எரி குழம்பால் ஆலைக்கு எந்த வித பாதிப்பும் வராத வண்ணம் பார்த்துக் கொள்ள அனைத்து நடவடிக்கைகளையும் முடுக்கி விட்டிருக்கிறோம்’ என்று தெளிவுபடுத்தி உள்ளனர்.