இலங்கையில் முதன்முறையான நாணய தாள்களை கொண்டு வெசாக் கூடு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
சேதமடைந்த நிலையில் இலங்கை மத்திய வங்கியினால் அகற்றப்பட்ட நாணயத்தாள்களை கொண்டு இந்த கூடு தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் 100 ரூபா முதல் 5000 ரூபா நாணயத்தாள்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
பாதுக்க, மொரகஹதென்ன ஸ்ரீமஹா விகாரையில் நாணய வெசாக் கூடு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் முதல் இந்த வெசாக் கூடு நிர்மாணிப்பு நடவடிக்கைககள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விகாரையின் விகாராதிபதி தெரிவித்துள்ளார்.
நூற்றுக்கும் மேற்பட்டோர் இணைந்து இரவு பகலாக, வெசாக் கூட்டினை நிர்மாணிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
வெசாக் கூடு காட்சிப்படுத்தல் இன்றுடன் முடிவுக்கு வரவுள்ளது. இதுவரை ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் இதனை பார்ப்பதற்காக வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.