அல்குர்ஆன் என்னும் மதுரம்

132

 

அல்குர்ஆனை அல்லாஹ்வின் வேத வார்த்தையாக பார்க்கிற நாம் அதை ஏற்றிப்போற்றுகிறோம். ஆனால் அந்தோ அந்த அல்குர்ஆன் நமக்கு படைக்கும் விருந்துகளை நாம் அறிந்தவர்களாக இருக்கிறோமா..

உலகில் இது வரை ஒரு வாழும் மறையாகவும் உலக சவாலாகவும் அல்குர்ஆன் திகழ்கிறது எனபதற்கோர் சிறு நிகழ்வு இதோ உங்கள் சிந்தனைக்கு

அரபு உலகின் சிந்தனையாளர்களுள் ஒருவரான அல்லாமா தன்தாவீ ஜவ்ஹரீ � இவர் எழுதிய தப்சீர் ஜவாஹிருல் குர் ஆன் (குர் ஆனின் முத்துக்கள்) – புகழ்பெற்ற ஒன்றாகும். அல்லாமா தன்தாவீ தன் பயண அனுபவம் ஒன்றை பகிர்ந்துகொள்கிறார்.

நான் ஒரு முறை ஜெர்மனிக்கு போயிருந்தேன். அங்கே எனது மேற்கத்திய நண்பர்கள் சிலருடன் அளவளாவிக் கொண்டிருந்தேன், அவர்கள் அரபு மொழியை நன்கு கற்றுத்தேர்ந்தவர்கள்.

பேச்சின் ஊடே அதில் உள்ள ஒரு அறிஞர் என்னிடம் கேட்டார் : நீங்கள் பிற முஸ்லிம் அறிஞர்களைப்போல குர்ஆன் தன் மொழியில் இலக்கண இலக்கிய நயத்தால் ஒரு (முஃஜிஸா) பேரற்புதம் எனக் கருதுகிறீர்களா?

நான் கூறினேன் �ஆம்� என்று, அவர் வியப்புற்று உங்களைப்போன்ற முற்போக்கு சிந்தனையும், விவேகமும் கொண்ட ஒருவர் கண்மூடித்தனமாக நம்பிக்கை கொண்டிருப்பது எனக்கு விந்தையாகவேப்படுகிறது என்றாரவர்.

இதில் என்ன விந்தையிருக்கிறது என்று கூறிய இவர்களுக்கு ஒரு பாடம் நடத்தவேண்டும் என்ற ஆவல் தோன்றியது. உடன் நான் கூறினேன் இது ஒரு அறிவுசார்ந்த பிரச்சனை இது முஹம்மது நபி காலத்தில் மட்டும் உண்டானது இல்லையே இப்பொழுது வேண்டுமானாலும் இங்கே ஒரு சோதனை செய்யலாம் என்று நான் கூறியதற்கு அத்துணை பேரும் ஆவலோடு தலை அசைத்தனர்.

உடன் நான் கூறினேன் நரகம் மிக விசாலமானது என்பதற்கு உங்கள் இலக்கிய அறிவுகளை பயன்படுத்தி ஒரு வாசகம் கூறுங்கள் என்று சொன்னேன்.

உடன் அவர்கள் பல்வேறு யோசனைக்கு பின் �� ���� ������     �� ���� ������   (இதன் பொருள் நரகம் மிக விசாலமானது) என்ற வாசகங்களை கொண்டு வந்தனர். நான் கூறினேன் இன்னும் உங்கள் இலக்கிய ஞானங்களை பயன்படுத்துங்கள். மீண்டும் யோசிக்க அவகாசம் தருகிறேன் என்று கூறினேன்.

அவர்கள் கூறலானார்கள் நாங்கள் மிகுந்த யோசனைக்கு பின் தான் இவற்றை பொருள் சொறிந்த வாசகங்களாக இங்கு கொண்டு வந்துள்ளோம்.

உடனே நான் கூறினேன் இப்பொழுது அல்குர்ஆனில் அல்லாஹ் இதே கருத்தை எவ்வளவு அழகாகவும் வியக்கத்தக்க முறையிலும் கூறியுள்ளான் என்று ஆரம்பித்ததும் அவர்கள் ஆர்வமாக கேட்கலானார்கள்.

ஸூரத்துல் �காஃப்� னின் ஒரு வசனத்தை ஓதினேன் அதில் இறைவன் நரகத்தைப்பற்றி குறிப்பிடுகின்றான்.

��� ���� ����� �� ������ � ���� �� �� ����

அன்றைய தினம் நாம் நரகத்தை நோக்கி உனது வயிறு நிரம்பிவிட்டதா ? என்று கேட்போம் அது இன்னும் இருக்கிறதா? என்று கேட்கும்.

ஒரு நிகழ்வை எவ்வளவு இலக்கிய ரசணையோடு இந்த வசனம் படம் பிடித்துக்காட்டுகிறது என்பதை அறிந்த உடன் ஆச்சிரிய மேலிட்டால் ஈமானை ஏற்றார்கள், முரண்டுபிடிப்பவர்களைக்கூட முஃமினாக மாற்றிய ஒரு வசனம் உண்மையில் ஒரு வாழும் அற்புதம் அல்லவா.

ஆகயால் உயிருக்குயிரான உயிரினும் மேலான நாகயம் திருமேனி அருளினார்கள்:

திருக்குர்ஆன் அனைத்துப் பொருட்களை விட மிகச் சிறந்தது, எவர் திருக்குர் ஆனை கண்ணியப்படுத்துகிறாரோ அவர் அல்லாஹ்வை கண்ணியப்படுத்தியவராவார். எவர் திருக்குர் ஆனை அலட்சியமாகக் கருதுகிறாரோ அவர் அல்லாஹ்வை அலட்சியமாக கருதியவராவார்.( ஹதீஸ்)

இன்னுமோர் ஹதீஸ் இப்படி சுட்டுகிறது:

நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) கூறினார்கள் : உங்களுக்கு இரண்டு நோய் நிவாரணிகளை அறிவிக்கிறேன் 1. அல்குர்ஆன் 2. தேன். (ஹதீஸ்)

மேலே உள்ள சம்பவத்தில் எப்படி குர்ஆன் மனதில் உள்ள நோய்களை போக்கியது என்று நிலையை தத்ரூபமாக பார்த்தோம்.

உண்மையில் அல்குர்ஆன் மனநோய்களை (psyacik, Tenson, anxcity) போக்குவது போல உடல் நோய்களை ( Psycal illness)  போக்குகிறது, தேன் உடல் நோய்களைப் போக்குவது போல் மனநோய்களையும் போக்குகிறது.

வல்ல அல்லாஹ் இந்த உண்மைகளை உணர்ந்து குர்ஆனை அதன் ஆழிய கருத்துக்களை அறிந்து ஓதி அதன் முழுப்பயனையும் உள்வாங்குகிற நல்ல வாய்ப்பை தருவானாக.

இந்த எழுத்துகள் பள்ளிக்குப் போய் ஆலிம்சாவிடம் ஓதியதையும் காலை மாலை மக்தப் பள்ளியையும் ஞாபகமூட்டுகிறதா?

அட வாப்பா… எழும்பி சுபுவு தொழுவுமா… தொழுவீட்டு பள்ளிக்கிப் போமா என்ற உம்மாமார்களின் குரல் பிள்ளையை எழுப்பிவிடும். தேயிலை குடித்து, வாடா கடித்து பிள்ளைகளை பள்ளிவாசல்தோறும் இயங்கிய மக்தப் பள்ளிக்கு அனுப்பியதையும் குர்ஆன் கல்வியுடன் தொடங்கியதையும், மாலை நேரம் ஸ்கூல் விட்டு வந்தவுடன் மீண்டும் குர்ஆன் ஓதுவதற்காக பள்ளிக்கு விரைவது. பின்னர் விளையாட்டு என அந்தக் காலத்தை சற்று மனக்கண்முன் கொண்டுவருவோம்.

 

டேய் எழும்புடா… ஸ்கூலுக்கு டைமாகிவிட்டது… சீக்கிரம் கிளம்பு என்று ஏழு அல்லது எட்டு மணிக்கு பிள்ளைகள் எழுப்பப்பட்டு, அது சோம்பல் முறித்து அரைகுறையாக ஆயத்தமாகி சுப்ஹும், குர்ஆன் ஓதலும், காலை துஆ, திக்ருகள் இல்லாத நிலையில் பள்ளிக்கூடத்துக்குக் கிளம்பும் சிறார்களின் இந்தக் காலத்தையும் எண்ணிப்பார்ப்போம்.

ஸ்கூல் விட்டு மாலை வீடு வந்தும் வராமல், சீக்கிரம் ரெடியாகு… ட்யூஷனுக்குக் கிளம்பு… என கொண்டுவந்த பொதிமூட்டையை மீண்டும் சுமந்துகொண்டு ட்யூஷனுக்கு செல்லும் பரிதாபமான சூழல். இத்தகைய சூழலில் உருவாகும் நம் பிள்ளைகளின் எதிர்காலம் எவ்வாறு இருக்கும்? இப்படித்தான் இன்றைய இளம் பிஞ்சுகளின் காலைப்பொழுது அமைந்துள்ளது. இப்படித் தொடங்கும் காலைப் பொழுதில் எவ்வாறு ‘பரக்கத்’ எனும் அருள்வளம் இறங்கும்? இத்தகைய கல்வி முறையால் எவ்வாறு வாழ்க்கையில் வெற்றிபெற இயலும்? இத்தகைய சூழலில் குடும்பங்களில் எவ்வாறு அமைதி தவழும்? நோய் நொடியற்ற ஆரோக்கியமான வாழ்வு எவ்வாறு கிடைக்கும்? இப்படி கேள்விகளை அடுக்கிக்கொண்டே போகலாம். அதுவல்ல இக்கட்டுரையின் நோக்கம்.

கோளாறு எங்கே? அதை சரி செய்வது எவ்வாறு? மாற்று வழி என்ன? என்பதை அலசுவதே இக்கட்டுரையின் நோக்கம். இதைவிட சிறந்த வழிமுறைகளை உங்கள் கருத்துகளின் வாயிலாக பதிவு செய்யுங்கள். சிறந்த ஒழுக்கமுள்ள சமூகத்தை கட்டியெழுப்புவதே இதன் தீர்வாக இருக்க வேண்டும்.

1980களில் எனது மக்தப் கல்வியை காட்டுத் தைக்கா தெரு அரூஸிய்யா பள்ளியில் தொடங்கினேன். அப்போது அரபி எழுத்துகளையும், குர்ஆன் ஓதுவதற்கான பயிற்சியையும் அளித்தவர் பேட்டை ஹஸ்ரத் என்ற பெரியவர். எளிய முறையில் அழகிய விதத்தில் எங்களைப் பயிற்றுவித்தார். குர்ஆன் ஓதித் தரும்போதே அதில் வரும் வினைச் சொற்களை ‘ஸர்ஃப்’ எனப்படும் ‘ஃபஅல’ ‘ஃபஅலா’ ‘ஃபஅலூ’ வாய்ப்பாட்டை போதித்தார். இப்படித்தான் அன்றைய பள்ளிவாசல்களில் குர்ஆன் மக்தப் மதரஸாக்கள் சிறப்பான முறையில் உயிரோட்டத்துடன் இயங்கிவந்தன.

விளைவு அதிகாலை (ஸுப்ஹ்) வேளையிலும் அந்தி சாயும் (மஃக்ரிப்) வேளையிலும் இல்லங்கள்தோறும் இறைமறையின் இனிய ஓசையை செவியுறலாம். வாழ்க்கை முறையில் ‘பரக்கத்’ எனும் வளமும் செழிப்பும் பொங்கிய பொற்காலமது. காலப்போக்கில் கொஞ்சம் கொஞ்சமாக இந்நிலை மாறி தொலைக்காட்சி பெட்டிகள், இண்டர்நெட், மொபைல் போன் ஆதிக்கமும் உலகியல் கல்வியின் முன்னுரிமையும் அளவுக்கதிகமாக வழங்கப்பட்டு, பிள்ளைகளிடம் குர்ஆன் மக்தப் கல்வி இரண்டாம் பட்ச நிலைக்கு தள்ளப்பட்ட பரிதாப நிலை. இதனால் குடும்பங்களில் ஒரு விதமான மனஇறுக்கமும் அழுத்தமும் அதிகமாகி நோய்கள் பெருகியுள்ள காலமிது. வாழ்வியலில் ஏகப்பட்ட குளறுபடிகள்.

ஏவப்பட்டவைகளும் – விலக்கப்பட்டவைகளும்.

فَالْيَوْمَ نُنَجِّيكَ بِبَدَنِكَ لِتَكُونَ لِمَنْ خَلْفَكَ آيَة ً وَإِنَّ كَثِيرًا مِّنَ النَّاسِ عَنْ آيَاتِنَا  لَغَافِلُونَ 

உனக்குப் பின் வருவோருக்கு நீ சான்றாக இருப்பதற்காக உன் உடலை இன்று பாதுகாப்போம். (என்று கூறினோம்.) மனிதர்களில் அதிகமானோர் நமது சான்றுகளை அலட்சியம் செய்வோராகவே உள்ளனர். 10 ;92

முஹர்ரத்தில் ஏவப்பட்டவைகளும் – விலக்கப்பட்டவைகளும்.

புனித மாதம்

வானங்களையும், பூமியையும் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் உள்ளபடி மாதங்களின் எண்ணிக்கை அல்லாஹ்விடம் பன்னிரண்டாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. இதுவே நேரான வழி. (புனிதமான) அம்மாதங்களில் உங்களுக்கு நீங்கள் தீங்கு இழைத்து விடாதீர்கள்! இணை கற்பிப்போர் ஒன்று திரண்டு உங்களுடன் போரிடுவது போல் நீங்களும் ஒன்று திரண்டு அவர்களுடன் போரிடுங்கள்! அல்லாஹ் (தன்னை) அஞ்சுவோருடன் இருக்கிறான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்! 6”36

மேற்குறிப்பிட்ட புனித மாதங்களாகிய நான்கு மாதங்களில் ஒன்று முஹர்ரம் மாதமாகும் அதில் பத்தாம் நாளும், அதற்கு முந்தைய ஒன்பதாவது நாளுமாகிய இரண்டு நாட்களில் நோன்பு நோற்க வேண்டும்.

ஆஷூரா நோன்பு பற்றிய நபிமொழிகள்

  • ரமளான் நோன்பிற்குப் பிறகு சிறந்த நோன்பு அல்லாஹ்வுடைய மாதமாகிய முஹர்ரத்தின் நோன்பாகும் (திர்மிதி)
  • ஆஷூரா தினத்தன்று நபி (ஸல்) அவர்கள் தானும் நோன்பு நோற்று, நோன்பு நோற்குமாறு பிறருக்கும் கட்டளையிட்டார்கள். அப்போது நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தூதர் அவர்களே! இது யூதர்களும் கிருத்துவர்களும் கண்ணியப்படுத்தும் நாளல்லவா? என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் வருடம் நான் உயிருடன் இருந்தால் ஒன்பதாவது நாளிலும் நோன்பு நோற்பேன் என்றார்கள் (முஸ்லிம்).
  • ஆஷூராவின் நோன்பு முந்தைய வருடத்துப் பாவங்களுக்கு பரிகாரமாக அமைகிறது (புகாரி)

ஏன் நோற்கப் படுகிறது ?

இறைதூதர் மூஸா(அலை) அவர்களுக்கு ஏகஇறைவன் சில அற்புதங்களை செய்து காட்டும் ஆற்றலை வழங்கினான் அவர்கள் செய்துகாட்டும் அற்புதங்களை சூனியம் என்று அந்நாட்டு மன்னன் ஃபிர்அவுன் உதாசீனப்படுத்தினான் காரணம் சூனியக்கலை அக்கால கட்டத்தில் நாடெங்கும் கோலோச்சிக் கொண்டிருந்தது.

மூஸா(அலை) அவர்கள் செய்துகாட்டும் அற்புதங்களை முறியடித்து அவர்களை மக்களிடம் தோல்வியுறச் செய்வதற்காக எகிப்து முழுவதிலிமிருந்து சூனியக்கலையில் கைதேர்ந்த மாந்திரீகர்கள் அனைவரையும் அரண்மனைக்கு அழைத்து வர ஃபிர்அவ்ன் உத்தரவிட்டான்.

இறைதூதரின் அற்புதத்தை பொய்ப்பிக்க முணைவது என்பது ஏகத்துவத்தை குழி தோண்டி புதைப்பதற்கு எடுத்த  முயற்சியாகும்.அதனால் அவனுடைய முயற்சியை முறியடித்து ஏகத்துவத்தை மேலோங்கச் செய்வதற்காக இறைத்தூதர் மூஸா (அலை) அவர்களை தயார் படுத்தினான் .

இறைதூதரும், மாந்திரீகர்களும் எதிரும் புதிருமாக சாகஸம் புரிவதற்காக நின்று கொண்டிருக்க மன்னன் தனது சிம்மாசனத்தில் வீற்றிருக்க முதலில் இறைதூதர் அவர்கள் மாந்திரீகர்களை நோக்கி நீங்களே  தொடங்குங்கள் என்றுக் கூறுகிறார்கள்.

(முதலில்) ”நீங்களே போடுங்கள்!” என்று (மூஸா) கூறினார். அவர்கள் (தமது வித்தைகளைப்) போட்ட போது மக்களின் கண்களை வயப்படுத்தினார்கள். மக்களுக்கு அச்சத்தையும் ஏற்படுத்தினார்கள். பெரும் சூனியத்தை அவர்கள் கொண்டு வந்தனர். 7:116

அவற்றைப்பார்த்ததும் மன்னனும், மாந்திரீகர்களும்,பார்வையாளர்களும் குதூகலமடைகின்றனர், அப்பொழுது இறைதூதர் அவர்கள்  இறைவன் பொய்யை அழித்து உண்மையை நிலைநாட்டுவான் என்று கூறுகிறார்கள் அதன் பின் தனது கைத்தடியை எறியும்படி இறைவன் இறைதூதருக்கு செய்தி அனுப்புகிறான். ”உமது கைத்தடியைப் போடுவீராக!” என்று மூஸாவுக்கு அறிவித்தோம். உடனே அது அவர்கள் செய்த வித்தையை விழுங்கியது. 7:117

எத்தனை மாந்திரீகர்கள் வரவழைக்கப்பட்டனரோ அவர்களில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கலையை கற்றிருப்பர் அத்தனையையும் இறைதூதருடைய கைத்தடியிலிருந்து வெளிப்பட்ட அற்புதம் ஒன்றுமில்லாமல் துடைத்தெறிந்துவிட்டது இதைப்பார்த்ததும் அவ்விடத்திலேயே இறைதூதர் மூஸா(அலை) அவர்களும், அவர்களுடைய சகோதரர் ஹாரூன் அவர்களும் ஏற்றுக்கொண்ட இறைவனை நாங்களும் ஏற்றுக்கொண்டோம் என்று அனைத்து மாந்திரீரகர்களும் திருக்கலிமாவை மொழிந்தனர்அகிலத்தாரின் இறைவனாகிய மூஸா மற்றும் ஹாரூனின் இறைவனை நம்பினோம் என்றும் கூறினர். 121, 122

தன்னை கடவுள் என்று பிரகடனப் படுத்திக்கொண்டு மொத்த மக்களையும் அடக்கி ஆணவம் செய்தவனால் இதை சகிக்க முடியவில்லை வெகுண்டெழுந்தான். தனது வலிமை மிக்க படையுடன் அவர்களை கொல்வதற்கு விரட்டுகிறான். வெருண்டோடியவர்களை செங்கடல் எதிர் கொண்டது அதற்கு மேல் அவர்களால் எங்கும் செல்ல முடியாது நம்மிடம் வசமாக சிக்கிக் கொண்டனர் என்று நினைத்தான் அவர்களுடைய உறுதிமிக்க இறைநம்பிக்கையைப் பார்த்த அல்லாஹ் ரப்புல் ஆலமீன் இறைத்தூதருடைய கையில் உள்ள தடியால் கடலின் மீது அடிக்கச் செய்து கடலைப் பிளக்கச் செய் அவர்களை கொடுங்கோலன் ஃபிர்அவுனிடமிருந்து காப்பாற்றி விடுகிறான்.

இஸ்லாயீலின் மக்களை கடலை கடக்கச் செய்தோம் ஃபிர்அவுனும் அவனது படையினரும் அக்கிரமமாகவும் அநியாயமாகவும் அவர்களைப் பின் தொடர்ந்தனர் முடிவில் அவன் மூழ்கும் போது இஸ்ராயீலின் மக்கள் நம்பியவனைத் தவிற வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை என நம்புகிறேன் நான் முஸ்லீம் என்று கூறினான்.10:90

அவனுடைய அரன்மணையில் எகிப்தினுடைய மொத்த மாந்திரீகர்களும் இஸ்லாத்தை ஏற்றபொழுதே இவனும் ஏற்றிருந்தால் அல்லாஹ் கண்ணியப் படுத்தி இருப்பான் காலம் கடந்து இறைவனை நம்பிக்கை கொண்டதால; அவனுடைய உடலை மட்டும் பாதுகாத்து பின்வரக்கூடிய மக்களுக்கு சாட்சியாக்குவதாக இறைவன் அவனிடம் கூறுகிறான்.

(இப்போது தானா நம்புகிறாய் ) அதற்கு முன் பாவம் செய்து கொண்டிருந்தாய், குழப்பம் செய்பவனாக இருந்தாய்.10:91, உனக்குப் பின் வருவோருக்கு நீ சான்றாக இருப்பதற்காக உன் உடலை இன்று(முதல்) பாதுகாப்போம், (என்று கூறினோம்) மனிதர்களில் அதிகமானோர் நமது சான்றுகளை அலச்சியம் செய்வோராக உள்ளனர்.10:92.

அல்லாஹ்வுடைய அத்தாட்சியைப் பார்த்ததும் தாமதிக்காமல் அவ்விடத்திலேயே இறைநம்பிக்கை கொண்டோம், என்று அவர்கள் கூறிய அந்த உறுதிக்காக அவர்களை இறைவன் கொடுங்கோல் மன்னனுடையப் பிடியிலிருந்து  கடலைப் பிளந்து காப்பாற்றியது ஒரு முஹர்ரம் மாதத்தின் பத்தாவது நாளாகும் அதற்கு இறைவனுக்கு நன்றி கூறும் விதமாக முஹர்ரம் மாதத்தின் ஆஷூரா நோன்பு நோற்கப் படுகிறது.

மாற்றமான யூத ஷியாக்களின் முடிவு 

வானங்களையும், பூமியையும் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் உள்ளபடி மாதங்களின் எண்ணிக்கை அல்லாஹ்விடம் பன்னிரண்டாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. இதுவே நேரான வழி. 9:36 என்று அல்லாஹ் கூறும் அந்த நேரான மார்க்கத்தில் கோணலை ஏற்படுத்துவதற்காக இறைநம்பிக்கை கொண்டோம் என்று பொய்க் கூறி உண்மையாக நம்பிக்கை கொண்ட மக்களை  வழி கெடுக்க யூதர்கள் செய்த சதி தான் முஹர்ரம் மாதத்தில் அநியாயமாக ஹூசைன் (ரலி) கர்பளாவில் கொல்லப்பட்டார்கள் எனும் வதந்தியாகும்.

அம்மாதங்களில் (போர்செய்து) உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொள்ளாதீர்கள்…9:36 என்ற அல்லாஹ்வுடைய உத்தரவை மீறி மதீனாவிலிருந்து கூபாவுக்கு ஹூசைன் ரலி அவர்கள் தலைமையில் வரம்புமீறி போர் நடத்திச்சென்றவர்கள் தோல்விஅடைந்தார்கள். என்பதுவே உண்மை.

இதன் பெயரால் இன்று உலகில் வாழும் ஷியாக்கள் உடல்களை கிழித்துக்கொண்டு ரெத்தம் ஓடச்செய்யும் வேடிக்கை கூத்துக்களை நாம் அதிகம் விவரிக்க வேண்டியதில்லை தொலைகாட்சிகளில் போட்டி போட்டுக்கொண்டு காட்டுவார்கள். ஒப்பாரி வைப்பது,ஆடைகளையும், உடல்களையும் கிழித்துக் கொள்வது இறை நிராகரிப்புச் செயலாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் (முஸ்லிம்)

ஷியாக்கள் செய்யக் கூடிய இந்த வினோதமான வேடிக்கைகளை சன்னி முஸ்லிம்களாகிய நம்மவர்கள் செய்வதில்லை என்றாலும் ஹஸன், ஹூசைன் (ரலி) பெயரால் கொலுக்கட்டை அவித்து வழங்குவது இன்றும் இருந்து வருகிறது இதுவும் மேல்படி அடிப்படை இல்லாத அநியாயமாக கொல்லப்பட்டார்கள் என்பதை நம்பி செயல்படுவதாகும் என்பதுடன் கொலுக்கட்டை அவித்துப் பகிர்வது என்பது இனிப்புப் பொருட்களை படையல் செய்யும் மாற்றுமத கலாச்சாரத்திற்கு ஒப்பானதாகும். பிறமதக் கலாச்சாரத்தை பின்பற்றுபவன் அவர்களையே சார்ந்தவன் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்(அபுதாவூத்)

அன்பிற்கினிய இஸ்லாமிய சகோதரர்களே!

ஷியாக்களுடைய நாசகார செயலை அதனுடைய நிழல் கூட நம்மீது படியவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் கொலுக்கட்டை அவித்து பகிர்வது, நெருப்பில் உப்பைக் கொட்டுவது போன்றவைகள் அவர்களுடைய நாசகார செயலின் நிழலாகும் அதனால் அவைகளையும் செய்யக் கூடாது.

ஷியாக்களுடைய அந்த இஸ்லாம் எனும் பெயரால் நடத்தப்படும் வரம்பு மீறிய செயலை தடுக்க வேண்டும் முடிய வில்லை என்றால் மனதால் வெறுக்க வேண்டும்.

உங்களில் எவரும் ஒரு தீமையைக் கண்டால் தமது கையால் அதைத் தடுக்கட்டும், இயலாவிட்டால் தமது நாவால் அதைத் தடுக்கட்டும், அதற்கும் இயலாவிட்டால் தமது உள்ளத்தால் அதைத் வெறுக்கட்டும். அதுவே ஈமானில் பலவீனமான நிலையாகும். என அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறி இருப்பதால் நம்முடைய சக்திக்குட்பட்ட வரை நமது ஊர்களில் நடக்கும் மேல்படி கலாச்சாரத்தை தடுத்து நிருத்துவதற்கு முயற்சியை மேற்கொள்ள வேண்டும், அதற்கு இயலவில்லை என்றால் மார்க்கம் என்றப் பெயரில் மேல்படி கலாச்சாரம் உள்ளே நுழைந்து விட்ட வரலாற்றை மக்களுக்கு விளக்கிக் கூற முயற்சிக்க வேண்டும்.

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் என்ன காரணத்தின் அடிப்படையில் ஆஷூரா நோன்பை நோற்றார்களோ நோற்கச் சொன்னார்களோ அதே காரணத்தின் அடிப்படையில் ஆஷூரா நோன்பை நோற்றால் கடந்த வருடத்துப் பாவங்கள் மன்னிக்கப்படும்.

ஆஷூரா நோன்பு நோற்றிருக்கும் போது பயங்கரவாத இஸ்ரேலிய ராணுவத்தினால் ஒரு வார காலமாக  தொடர்ந்து சல்லடையாக்கப்பட்டு வரும் பலஸ்தீன் அப்பாவி மக்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள், அப்பாவிகளை, பலஹீனர்களை, நிராயுத பானிகளை கொலை செய்யும் அதிகார வரக்த்திரை இறைவனிடம் ஒப்படையுங்கள்.

இறைவனுடைய சாபத்திற்கு ஆளான யஹூதிகளின் மீது இறைவனுடைய பிடி இறுகும் காலத்தை விரைவு படுத்தச்சொல்லிக் கேளுங்கள். அவர்களுக்கான தீர்ப்பு இறைவன்கையில் இருக்கிறது.

நாம் நேற்று அழுது கேட்டோம் இன்று அவர்கள் அப்படியேத் தானே இருக்கின்றனர் என்ற விரக்தியில்  வேண்டுதலை நிருத்திடாதீர்கள்,குறைத்திடாதீர்கள்.

அரசு அன்று கேட்கும்தெய்வம் நின்று கேட்கும்.

இறைவன் குற்றவாளிகளுக்கு கண்துடைப்பு தண்டனைக் கொடுக்க மாட்டான். கடுமையான தண்டனையை கொடுப்பான், கடுமையான தண்டனை கொடுப்பத்றகாக குற்றவாளிகளை இன்னும் குற்றத்தில் மூழ்க விட்டு காலக்கெடுவை நீட்டுவான்.

وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ

நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன். 3:104

 

SHARE