அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடிக்கும் போது தேவைக்கு மிஞ்சிய நீரை மூளை தடுத்து நிறுத்துகிறது.
இதனால் அந்த தண்ணீரை மற்ற உடல் உறுப்புகள் மிக கடுமையாக ஏற்றுக்கொள்ளக் கூடிய சூழ்நிலை உருவாகிறது.
தண்ணீரில் உள்ள சோடியத்தின் அளவு ரத்தத்தில் குறைந்து உடல் தனது நிலையை இழக்கச் செய்கிறது.
இதனால் குமட்டல் மற்றும் நினைவிழக்க செய்தல் நிலை உருவாகி ‘கோமா’ நிலைக்கு செல்லும் ஆபத்தும் உருவாகிறது. இதுவே உயிரை பறிக்க கூடிய சூழ்நிலையையும் ஏற்படுத்துகிறது.
எனவே போதுமான அளவு மட்டும் தண்ணீர் குடித்து நிறைவாக வாழும்படி அவுஸ்திரேலியாவின் மோனாஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.