அளுத்கம பிரதேசத்திலிருந்து இராணுவத்தினர் வெளியேறினர்

216

அளுத்கம பிரதேசத்தில் நிலைநிறுத்தப்பட்டிருந்த இராணுவத்தினர் முற்று முழுதாக வெளியேறியுள்ளனர்.
கடந்த 2014ம் ஆண்டு ஜூன் மாதம் சிங்கள பௌத்தர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் இடம்பெற்ற மோதல்களைத் தொடர்ந்து இராணுவத்தினர் அளுத்கம பிரதேசத்தில் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
கடந்த பதினாறு மாதங்களாக படையினர் அளுத்கம பிரதேசத்தில் நிலைநிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கலவரத்தில் சேதமடைந்த வீடுகள் மற்றும் கட்டடங்களை புனரமைக்கும் பொறுப்பு படையினரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.
நீண்ட காலம் நிலைகொண்டிருந்த படையினர் பகுதியை விட்டு வெளியேறுவதனை முன்னிட்டு பிரதேச மக்களும் அலுத்தகம அபிவிருத்தி நிறுவனமும், விசேட பிரியாவிடை நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது.

SHARE