அழகானவன் என்ற காரணத்தால் நாடு கடத்தப்பட்ட இளைஞன்

159

சவுதியிலிருந்து ஒமார் பொர்கான் என்ற இளைஞரை நாடு கடத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்த இளைஞனின் அதிக அழகே இதற்கு காரணமாகியுள்ளதென ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
ஒமார் பொர்கான் அல் கலா என்ற இந்த இளைஞன் ஈராக்  பூர்வீகத்தை கொண்ட ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இராஜியத்தை சேர்ந்த இளைஞராகும்
உலகில் வாழும் அழகான இளைஞர்களுக்கு ஒருவராக அடையாளப்படுத்தப்படும் இந்த இளைஞருக்கு இளம் பெண் மத்தியில் அதிக ஈர்ப்பை பெற்றுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
அண்மையில் சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் மத வழிப்பாடு ஒன்றில் இந்த இளைஞர் கலந்துக்கொண்டிருந்த நிலையில், அங்கு வந்த பெண்ணை இந்த இளைஞர் ஈர்த்துள்ளார் என்ற காரணத்தினால் அந்த நாட்டு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதன் பின்னர் அந்த இளைஞர் மீண்டும் சவுதி நாட்டிற்கு வரமுடியாத வகையில் நாடு கடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
SHARE