தமிழ், தெலுங்கு இரண்டு மொழிக ளிலும், 10 ஆண்டுக ளுக்கு மேலாக சினிமா வில் நீடித்து வருபவர் நடிகை த்ரிஷா.
இன்று அவர் தனது 33 பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
பூர்வீகம் கேரளா என்றாலும் அவர் பிறந்து, வளர்ந்தது எல்லாமே சென்னை தான். த்ரிஷா ஒரு மொடலாக தன் வாழ்க்கையை தொடங்கி 1999 ஆம் ஆண்டு மிஸ் சேலம், ‘மிஸ் சென்னை’ என்ற பட்டத்தை வென்றவர்.
இதற்கு பின் பல இயக்குநர்கள் இவரை நடிக்க வைக்க படையெடுத்தனர். குறிப் பாக கௌதம் மேனன் தன் முதல் படமான ‘மின்னேலே’ படத்தில் இவரை நடிக்க வைக்க முயற்சி செய்தாராம்.
ஜோடி படத்தில் ஏதோ ஒரு ஓரத்தில் தலையை காட்டினாலும், ‘லேசா லேசா ’படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். ஆனால், முதன்முதலாக இவருடைய நடிப்பில் வெளிவந்த படம் ‘மௌனம் பேசியதே’.
த்ரிஷா திரையில் காலடி எடுத்து வைத்த நேரத்தில் சிம்ரன், ஜோதிகா என மிகப்பெரிய நடிகைகள் திரையுலகை ஆட்சி செய்த வந்த நேரம். ஆனால், இவரின் கடுமையான உழைப்பு எளிதில் விஜய், அஜித், விக்ரம், சூர்யா, சிம்பு போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. கடந்த ஆண்டு நடிகர் கமலுடனும் நடித்து விட்டார்.
ரஜினி, விக்ரம் போன்ற போன்ற முன்னணி நடிகர்களுடன் மட்டுமே த்ரிஷா நடிக்கவில்லை. த்ரிஷா எப்போதும் செல்ல பிராணிகள் மீது மிகுந்த அன்பு கொண்டவர். வீதியில் அநாதையாக நாய்கள் கிடப்பதை கண்டால் அதனை எடுத்து பராமரித்து வருபவர்தான் த்ரிஷா.
இவர் இதுவரை 2 பிலிம் பேர் விருதை வாங்கியுள்ளார். மேலும், கலைமாமணி, தென்னிந்தியாவின் சிறந்த நடிகை, நந்தி விருது போன்ற விருதுகளையும் பெற்றுள்ளார்.
த்ரிஷாவுக்கு நடிகர் ரணாவுடன் காதல் என்று பேசப்பட்டாலும் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் , 2015 ஆம் ஆண்டு இயக்குநர் வருண் மணியனோடு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஆனால் திருமணம் தனிப்பட்ட காரணங்களால் நடைபெறாமல் போனது.
10 வருடங்களுக்கு மேல், இன்றும் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வரும் த்ரிஷா இன்று போல் என்றும் தன் திரைப்பயணத்தில் வெற்றிபெற அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.